Sharon Global Revival Ministries & Navi Mumbai Prayer Fellowship

Sharon Global Revival Ministries & Navi Mumbai Prayer Fellowship THE OFFICIAL FACEBOOK PAGE OF SHARON GLOBAL REVIVAL MINISTRIES & NAVI MUMBAI PRAYER FELLOWSHIP

Brief Information about Dr. R S A Williams – Founder & President of SGRM/ NMPF
(An anointed servant of God carrying Lord’s word in Tamil & English across the Globe)

- Motivational Speaker to Global Audience on Management Subjects (with Biblical base)
- Anointed Speaker on Evangelism and Spiritual Topics
- Faculty in Seminars/ Retreats and Conventions with the guidance of Holy Sp

irit
- Management Expert specialised in Global Logistics

Spiritual Background and Services to the Lord with Global Span Coverage
• Commenced Lord’s ministry during the year 1988
• Celebrating completion of the 25th year of ministry in this blessed year 2013
• Balanced the ministry with Corporate Career judiciously for 20 years and entered into full time ministry during the year 2007 spanning 6 years now (25 years of glorious ministry in His Vineyard). We are into –
• Ministry among corporate personnel/ politicians & bureaucrats
• Ministry among churches across nations without denominational barrier
• Miracle all night prayer ministry
• Bible study and seminar ministry
• Ministry of personal evangelism
• Ministry among families/ women/ youth & children
• E-mail ministry
• E-magazine ministry
• Television ministry
• Crusade ministry
• Hospital ministry
• Cottage prayer ministry
• Travelled and ministered in more than 17 countries
• Carrying Lord’s word across India and around the Globe with Love and Compassion

Educational Background
• Bachelors Degree in Law/ Bachelors Degree in Arts
• Masters Degree in Business Management
• Masters Degree in Theology
• PG Diploma in Transport Management/ PG Diploma in Personal Management & Industrial Relations
• Honorary Doctorate Degree

Service Background with Industries in India & abroad
• Commenced corporate career with Tata Group immediately after completion of Education and had an opportunity serving with prominent Blue Chip companies by availing more exposure in Logistics field holding designations right from OFFICER to EXECUTIVE DIRECTOR.
• The Industries served are -
Tea Industry
Paper Industry
Steel Industry
Shipping Industry
Logistics Industry
Media Industry
• Served in Belgium (Europe) as a Vice President/ Director Europe Operations for an Indian MNC and travelled extensively around the world spanning more than 16 countries.
• Left worldly job during the year 2007 and serving the Lord within India and across the globe thereafter on a full time basis. Address & Contact Coordinates
..... Presently settled in Mumbai by having base in Kharghar, Navi Mumbai - Maharastra

Dr. R S A Williams - Founder & President
Sharon Global Revival Ministries & Navi Mumbai Prayer Fellowship
C-1002, Tharwani Heritage, Sector 7, Kharghar, Navi Mumbai – 410 210 Tel. +91 22 2774 9200
Mob. +91 99672 28488
E-mail: [email protected] [email protected]
FB: www.facebook.com/sgrm.nmpf

🟤⚪🟤 2099-வது நாளின் காலைத்தியானம்  14/09/2026 !!!இந்த காலைவேளையில், "தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அ...
13/09/2026

🟤⚪🟤 2099-வது நாளின் காலைத்தியானம் 14/09/2026 !!!

இந்த காலைவேளையில், "தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத் தொடான்" ...... "THE ONE WHO HAS BORN OF GOD KEEPS THEM SAFE, AND THE EVIL ONE CANNOT HARM THEM" என்று (1 JOHN) 1 யோவான் 5:18-ல் காணப்படும் வேதபகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.

தேவனால் பிறந்தவர்கள், அதாவது இயேசு கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டவர்கள் பாவத்திலிருந்து தங்களை காத்துக் கொள்வார்கள். பொல்லாங்கன் அவர்களைத் தொடவோ, தீங்கு விளைவிக்கவோ முடியாது.

‘பொல்லாங்கன்’ என்பது சாத்தான் மற்றும் தீய சக்திகளையும் குறிக்கிறது. 1 யோவான் 5:19-ல் “நாம் தேவனால் உண்டாயிருக்கிறோமென்றும், உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம்” என்று பார்க்கிறோம்.

பொல்லாத உலகில் வாழ்கின்ற அவருடைய பிள்ளைகளாகிய நாம், "பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப் போடத்தக்கதாய், …. விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக் கொண்டவர்களாயும் நில்லுங்கள்" என்று எபேசியர் 6:16-ல் கூறப்பட்டுள்ளது.

மேலும், மற்றவர்களுடைய வாழ்க்கையை அழித்துப் போடும் தீய காரியங்களை செய்வதில் நாம் ஜாக்கிரதை உள்ளவர்களாயிருப்போம். “பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப்போலிருக்கவேண்டாம்…” என்று 1 யோவான் 3:12-ல் மூலமாக வேதம் நமக்கு ஒரு எச்சரிப்பைக் கொடுக்கிறது.

எனவே பிரியமானவர்களே, பொல்லாங்காய்த் தோன்றுகிற அனைத்தையும் விட்டுவிலகுவோம். பொல்லாங்கன் நம்மைத் தொடாதபடி கர்த்தர் நம்மைப் பாதுகாத்துக் கொள்வார்.

ஜெபம்: இந்த நாளின் வார்த்தையின்படியே, தேவனால் பிறந்த நாங்கள் எங்களைக் காத்துக்கொள்ளவும், பொல்லாங்கன் எங்களைத் தொடாதபடி பாதுகாப்போடு இருக்கவும் ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப்பிதாவே…ஆமென்

ஜெப தேவைகளுக்கும் ஆலோசனைகளுக்கும்
24/7- 9967228488
WhatsApp- 7400472200

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India
NMPF - Mumbai India

🔵⚪ 🔵 2098-வது நாளின் காலைத்தியானம் 13/09/2026 !!!இந்த ஓய்வுநாளின் காலைவேளையில், "அதை உம்முடைய வாக்கினால் சொன்னீர்; இந்நா...
12/09/2026

🔵⚪ 🔵 2098-வது நாளின் காலைத்தியானம் 13/09/2026 !!!

இந்த ஓய்வுநாளின் காலைவேளையில், "அதை உம்முடைய வாக்கினால் சொன்னீர்; இந்நாளில் இருக்கிறபடி உம்முடைய கரத்தினால் அதை நிறைவேற்றினீர்” …... "WITH YOUR MOUTH YOU HAVE PROMISED AND WITH YOUR HAND YOU HAVE FULFILLED IT AS IT IS TODAY” என்று (1 KINGS) 1 இராஜாக்கள் 8:24-ல் காணப்படும் வேதப்பகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.

கர்த்தர் தாவீதிற்கு, அவன் கர்ப்பப்பிறப்பாகிய அவன் குமாரனே ஆலயத்தைக் கட்டுவான் என்று வாக்குக் கொடுத்திருந்தார். அப்படியே, தாவீதின் குமாரனாகிய சாலொமோன், ஆலயத்தைக் கட்டி பிரதிஷ்டை செய்த வேளையில் மேற்கண்ட தியானப்பகுதியைக் கூறி கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்தியதாக பார்க்கிறோம்.

உலக மனிதர்களாகிய நாம், அனேக வேளைகளில் கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை. அவ்வாறு நிறைவேற்றுவோமானால் திருமண உறவுகள் முறிந்துபோகாது, குடும்பங்களில் பிரிவினைகளும், சமாதானக் குறைவும் காணப்படாது.

ஆனால் நம் அன்பின் தேவனோ, நமக்குக் கொடுத்த ஒவ்வொரு வாக்குறுதிகளையும், நல் வார்த்தைகளையும் அவர் குறித்த நேரத்தில் அப்படியே நிறைவேற்றுவார்.

எரேமியா 33:14-ல் “இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது நான் இஸ்ரவேலின் குடும்பத்துக்கும், யூதாவின் குடும்பத்துக்கும் சொன்ன நல்வார்த்தையை நிறைவேற்றுவேன்” என்று இந்தநாளிலே நம்மை உற்சாகப்படுத்தப்படுகிறார்.

எனவே பிரியமானவர்களே, வாக்குப்பண்ணின நம் தேவன் உண்மையுள்ளவர், அவர் பொய்யுரையாதவர் என்பதை நினைவில் கொள்வோம். அவர் தமது வார்த்தையைத் தீவிரமாய் நம் வாழ்வில் நிறைவேற்றி நம்மை ஆசீர்வதிப்பார்.

ஜெபம்: இந்த நாளின் வார்த்தையின்படியே, கர்த்தராகிய நீர் உம்முடைய வாக்கினால் சொன்னதை உம்முடைய கரத்தினால் நிறைவேற்றுவீர் என்று விசுவாசித்து ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப்பிதாவே...ஆமென்

ஜெப தேவைகளுக்கும் ஆலோசனைகளுக்கும்
24/7- 9967228488
WhatsApp-7400472200

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India
NMPF - Mumbai India

🟢⚪🟢 2097-வது நாளின் காலைத்தியானம் 12/09/2026 !!!இந்த காலைவேளையில், "தேவரீர், என் விளக்கை ஏற்றுவீர்"..… "YOU, LORD, KEEP ...
11/09/2026

🟢⚪🟢 2097-வது நாளின் காலைத்தியானம் 12/09/2026 !!!

இந்த காலைவேளையில், "தேவரீர், என் விளக்கை ஏற்றுவீர்"..… "YOU, LORD, KEEP MY LAMP BURNING” என்று (PSALM) சங்கீதம் 18:28-ல் காணப்படும் வேதபகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.

நம் வாழ்வில் சோதனைகள், தோல்விகள், பாடுகள், கவலைகள் போன்ற இருளான காரியங்கள் சூழ்ந்து கொள்ளும்போது, கர்த்தர் நம் விளக்கை ஏற்றி, தமது பிரசன்னத்தினால் நம்மை நிரப்பி, அந்த இருளை வெளிச்சமாக மாற்றுகிறார்.

ஒரு இடத்திலே வெளிச்சம் வேண்டுமானால், வெளிச்சம் கொடுக்கும் விளக்கின் திரி தொடர்ந்து எரிந்து கொண்டேயிருக்க வேண்டும். அதற்கு எண்ணெய் குறைவுபடாமல் ஊற்றப்படவேண்டும். இல்லையேல், திரி அணைந்து, இருள் சூழ்ந்துவிடும். இருளிலே விஷப் பூச்சிகளும், துஷ்டமிருகங்களும் தமது ஆதிக்கத்தை ஆரம்பித்துவிடும்.

கிறிஸ்தவ வாழ்க்கையும் ஒளி கொடுக்கும் விளக்கைப் போன்றது. அது மங்கி அணைந்துபோக ஒருபோதும் இடமளிக்கக்கூடாது. அபிஷேகமாகிய எண்ணைய் ஊற்றப்பட்டுக் கொண்டேயிருக்க வேண்டும்

ஒளி கொடுக்கும் தேவபிள்ளைகளின் வாழ்க்கைத் திரியை அணைத்துப்போட, இருளின் அதிபதியாகிய சாத்தான் பலவழிகளிலும் கிரியை செய்து வருகிறான்.

வேதவாசிப்பு, ஜெபம் குறைந்து, நம் இருதயம் கடினப்படும்போது, அனுதினமும் நம்மை உந்தித் தள்ளி, நம்மை வழிநடத்தும் பரிசுத்த ஆவியானவர் நம்மைவிட்டு விலகி விடுகிறார். விளக்கு அணைந்து போகும். இருள் சூழ்ந்து கொள்ளும்.

எனவே பிரியமானவர்களே, இப்போதே நம்மை ஆராய்ந்து பார்த்து, மங்கிப்போயிருக்கும் நமது வாழ்க்கைப் பகுதிகளை உண்மையாகவே தேவனிடம் அறிக்கை செய்வோம். நம் தேவன், நமது விளக்கை ஏற்றி, ஒளி வீசச்செய்வார்.

ஜெபம்: இந்த நாளின் வார்த்தையின்படியே, தேவனாகிய நீர், அணைந்து போயிருக்கிற எங்கள் விளக்கை ஏற்றி, எங்களை பிரகாசிக்கச் செய்ய ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே…ஆமென்.

ஜெப தேவைகளுக்கும் ஆலோசனைகளுக்கும்
24/7- 9967228488
WhatsApp- 7400472200.

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India.
NMPF - Mumbai India

🟤⚪🟤 2096-வது நாளின் காலைத்தியானம்  11/09/2026 !!!இந்த காலைவேளையில், "உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்"...
10/09/2026

🟤⚪🟤 2096-வது நாளின் காலைத்தியானம் 11/09/2026 !!!

இந்த காலைவேளையில், "உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்" ....... "A FAITHFUL PERSON WILL BE RICHLY BLESSED" என்று (PROVERBS) நீதிமொழிகள் 28:20-ல் காணப்படும் வேதபகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.

நமது ஊழியத்திலும், தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்க்கையிலும், நாம் கையிட்டு செய்கிற வேலைகள், எடுக்கிற பிரயாசங்கள் அனைத்தும் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்றே விரும்புகிறோம்.

ஆம், உண்மையுள்ள மனுஷர்களுக்கு பரிபூரண ஆசீர்வாதங்களைக் கர்த்தர் வாக்களித்துள்ளார். நீதிமொழிகள் 12:22-ல் “….உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்” என்று காண்கிறோம்.

‘உண்மை’ என்பது நாம் கர்த்தருக்கும், மனுஷருக்கும் முன்பாக கள்ளங்கபடில்லாமல், காரியங்களை செய்வதைக் குறிக்கும். அது ஊழிய காரியங்களோ, நம்பி கொடுக்கப்பட்ட பொறுப்புகளோ, பணம் சம்பந்தப்பட்டவைகளோ... அவைகளில் எவ்வளவு உண்மையாக இருக்கிறோம் என்பதே மிகவும் முக்கியம்.

உண்மையாய் நடப்பவர்கள், உலக வாழ்க்கையில், சில நேரங்களில் நன்மையான காரியங்களை இழந்துபோக நேரிடலாம். ஆனால், நித்திய வாழ்விலே, ‘உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியனே, உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி’ என்று ஆண்டவரின் வரவேற்பைப் பெற்றுக்கொள்வது எத்தனை பெரிய பாக்கியம்.

கர்த்தர், மோசேயைக் குறித்து ‘என் தாசனாகிய மோசேயோ …. என் வீட்டில் எங்கும் உண்மையுள்ளவன்’ என்று எண்ணாகமம் 12:7-ல் சாட்சிக் கொடுத்திருப்பதைப் பார்க்கிறோம்.

எனவே பிரியமானவர்களே, எல்லாக்காரியத்திலும் உண்மையாக இருப்போம். அனைத்து ஆசீர்வாதங்களையும் பெற்று வாழ்ந்திருப்போம்.

ஜெபம்: இந்த நாளின் வார்த்தையின்படியே, நாங்கள் உண்மையுள்ள மனுஷர்களாய் காணப்பட்டு, உம்மிடத்தில் இருந்து பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள உதவி செய்யும். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப்பிதாவே…ஆமென்.

ஜெப தேவைகளுக்கும் ஆலோசனைகளுக்கும்
24/7- 9967228488
WhatsApp- 7400472200

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India
NMPF - Mumbai India

🟡⚪🟡 2095-வது நாளின் காலைத்தியானம் 10/09/2026 !!!இந்த காலைவேளையில், "பெருமையுள்ளவனைப் பார்க்கிலும் பொறுமையுள்ளவன் உத்தமன்...
09/09/2026

🟡⚪🟡 2095-வது நாளின் காலைத்தியானம் 10/09/2026 !!!

இந்த காலைவேளையில், "பெருமையுள்ளவனைப் பார்க்கிலும் பொறுமையுள்ளவன் உத்தமன்"…. "PATIENCE IS BETTER THAN PRIDE" என்று (ECCLESIASTES) பிரசங்கி 7:8-ல் காணப்படும் வேதப்பகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.

‘பெருமை’ என்பது நம் சொந்த பலத்தையும் ஞானத்தையும் உயர்த்தி வைப்பதாகும். பெருமையுள்ளவன் “நான் கட்டின வீடு, நான் சம்பாதித்த சொத்து, எல்லாமே என்னுடைய திறமையினால் வந்தது” என்று கூறுகிறான்.

அவன் எதையும் பொறுமையோடு தாங்காமல், சீக்கிரமாய் கோபமடைகிறான். எல்லா சோதனையிலும் அமைதியாக இருந்து, தேவனுடைய சித்தத்திற்காகக் காத்திருப்பவனே உத்தமன்.

தேவன் யோபுவைக் குறித்து சாட்சி கொடுக்கும்போது, அவனது அந்தஸ்தையோ செல்வத்தையோ குறிப்பிடாமல், உத்தமன், சன்மார்க்கன், தேவனுக்குப் பயந்து நடப்பவன், பொல்லாப்புக்கு விலகுகிறவன் என அவனது குணாதிசயங்களைப் புகழ்ந்தார். தேவன் நம்மிடமும் இப்படிப்பட்ட நற்குணங்களையே எதிர்பார்க்கிறார்.

யோபு உபத்திரவத்திலும் விசுவாசத்தோடும் பொறுமையோடும் இருந்தான். அதனால் கர்த்தர் அவனுடைய சிறையிருப்பை மாற்றி, இழந்த அனைத்தையும் இரட்டிப்பாகத் தந்து ஆசீர்வதித்தார்.

யாக்கோபு 5:11-ல் “இதோ, பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான்களென்கிறோமே! யோபின் பொறுமையைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்” என்று கூறப்பட்டுள்ளது.

எனவே பிரியமானவர்களே, எக்காரியத்திலும் பெருமை கொள்ளாமல், பொறுமையைக் கடைபிடித்து, உத்தமர்களாய் வாழ்வோம்.

ஜெபம்: இந்த நாளின் வார்த்தையின்படியே, நாங்கள் எதிலும் பெருமையுள்ளவர்களாயிராமல், எல்லாவற்றிலும் பொறுமையுள்ளவர்களாய் இருந்து, உத்தமர் என்ற பெயர் பெற்று வாழ கர்த்தராகிய நீர் உதவிசெய்யும். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே…. ஆமென்.

ஜெப தேவைகளுக்கும் ஆலோசனைகளுக்கும்
24/7– 9967228488
WhatsApp– 7400472200

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM– Chennai, India
NMPF– Mumbai, India

🟢⚪🟢 2094-வது நாளின் காலைத்தியானம் 09/09/2026 !!!இந்த காலைவேளையில், "அவர்களுக்குத் தானியமும் திராட்சரசமும் பெருகியிருக்கி...
08/09/2026

🟢⚪🟢 2094-வது நாளின் காலைத்தியானம் 09/09/2026 !!!

இந்த காலைவேளையில், "அவர்களுக்குத் தானியமும் திராட்சரசமும் பெருகியிருக்கிறகாலத்தின் சந்தோஷத்தைப்பார்க்கிலும் அதிக சந்தோஷத்தை என் இருதயத்தில் தந்தீர்"..… "YOU HAVE PUT MORE JOY IN MY HEART THAN THEY HAVE WHEN THEIR GRAIN AND NEW W**E ABOUND” என்று (PSALM) சங்கீதம் 4:7-ல் காணப்படும் வேதபகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.

தானியமும், திராட்சரசமும் பெருகியிருப்பது என்பது உலகப் பிரகாரமான செல்வத்தையும், சரீர நன்மைகளையும் குறிக்கிறது. இவை அனைத்தும் அழியக்கூடிய மற்றும் தற்காலிகமான சந்தோஷத்தையேத் தரும்.

இவைகளைப் பார்க்கிலும், தேவன் நம் இருதயத்தில் தரும் சந்தோஷம் எந்தச் சூழ்நிலையிலும் மாறாத, தெய்வீக அனுபவமாகும். இது பரிசுத்த ஆவியின் மூலமாக நமக்கு கிடைக்கிறது.

இன்று உலக மனிதர்கள் சந்தோஷத்தைப் பெற்றுக்கொள்ள பற்பல இடங்களுக்குச் சென்று, பல காரியங்களைச் செய்கின்றனர். இயேசுவோடுள்ள உறுதியான உறவுதான் நமக்கு உண்மையான சந்தோஷத்தைத் தருகிறது.

இயேசு“என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும் இவைகளை உங்களுக்குச் சொன்னேன்” என்று யோவான் 15:11-ல் கூறியுள்ளார்.

இயேசுகிறிஸ்துவில் நிலைத்திருத்தல், மிகுந்த கனிகளைக் கொடுத்தல், இயேசுவுக்குச் சீஷராயிருத்தல், அவர் அன்பில் நிலைத்திருத்தல் என்பவைகளைக் குறித்து இயேசு கூறிவிட்டு, தமது சந்தோஷம் நம்மில் நிலைத்திருக்க இவற்றைச் சொன்னதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எனவே பிரியமானவர்களே, உலகம் தரக்கூடாத சந்தோஷத்தை கர்த்தருக்குள் நாம் அனுபவிக்க முடியும் என விசுவாசிப்போம்.

ஜெபம்: இந்த நாளின் வார்த்தையின்படியே, தானியமும் திராட்சரசமும் பெருகியிருக்கிறகாலத்தின் சந்தோஷத்தைப்பார்க்கிலும் அதிக சந்தோஷத்தை எங்கள் இருதயத்தில் கர்த்தராகிய நீர் தந்தீர் என்று விசுவாசித்து ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே…. ஆமென்.

ஜெப தேவைகளுக்கும் ஆலோசனைகளுக்கும்
24/7- 9967228488
WhatsApp- 7400472200.

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM- Chennai India.
NMPF- Mumbai India

🟠⚪🟠 2093-வது நாளின் காலைத்தியானம்  08/09/2026 !!!இந்த காலைவேளையில் "என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்; அப்பொழுது உன் ஆயுசின் வ...
07/09/2026

🟠⚪🟠 2093-வது நாளின் காலைத்தியானம் 08/09/2026 !!!

இந்த காலைவேளையில் "என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்; அப்பொழுது உன் ஆயுசின் வருஷங்கள் அதிகமாகும்" ..... "ACCEPT WHAT I SAY, AND THE YEARS OF YOUR LIFE WILL BE MANY" என்று (PROVERBS) நீதிமொழிகள் 4:10-ல் காணப்படும் வேதபகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.

உலக மனிதர்கள், கர்த்தருக்கு பயப்படுகிற சிந்தையில்லாமல், பாவத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இருதயத்தில் வஞ்சம்,கசப்பு, வைராக்கியம், கோபம் இருப்பதால் நிம்மதியாக வாழவோ, உண்ணவோ, உறங்கவோ முடியாமல் தவிக்கிறார்கள். இதனால் பலவித நோய்களுக்கு ஆளாகி, அவர்களுடைய ஆயுசு நாட்களை குறைத்து விடுகின்றது.

தேவனுடைய வார்த்தைகளை தினமும் தியானித்து, நம் வாழ்வில் அதை கடைப்பிடிக்கும் போது, நமது ஆயுசின் நாட்கள் அதிகமாகும் என்று இந்தநாளின் தியானபகுதி மூலமாக அறிகிறோம்.

நீதிமொழிகள் 3:1,2-ல் “என் மகனே, என் போதகத்தை மறவாதே; உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது. அவைகள் உனக்கு நீடித்த நாட்களையும், தீர்க்காயுசையும், சமாதானத்தையும் பெருகப்பண்ணும்” என்று கூறப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம்.

வேதத்திலே, அதிக நாட்கள் உயிரோடு வாழ்ந்தவன் மெத்தூசலா என்றும், அவர் 969 வருடங்கள் உயிர் வாழ்ந்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நீதிமொழிகள் 10:27-ல் “கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசுநாட்களைப் பெருகப்பண்ணும்” என்று வாசிக்கிறோம்.

எனவே பிரியமானவர்களே, கர்த்தருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து, அவருக்கு பயந்து வாழ்வோம். நிச்சயமாகவே, நமது ஆயுசின் வருஷங்கள் விருத்தியாகும்.

ஜெபம்: இந்த நாளின் வார்த்தையின்படியே, நாங்கள் கர்த்தராகிய உமது வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, அதன்படி வாழ உதவி செய்யும். அப்பொழுது எங்கள் ஆயுசின் வருஷங்கள் அதிகமாகும் என்ற விசுவாசத்தோடு ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே….ஆமென்.

ஜெப தேவைகளுக்கும், ஆலோசனைகளுக்கும்
24/7- 9967228488
WhatsApp. 7400472200

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM- Chennai India
NMPF- Mumbai India

🔴⚪🔴 2092-வது நாளின் காலைத்தியானம் 07/09/2026 !!!இந்த காலைவேளையில், "அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெ...
06/09/2026

🔴⚪🔴 2092-வது நாளின் காலைத்தியானம் 07/09/2026 !!!

இந்த காலைவேளையில், "அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்"...... "CAST ALL YOUR ANXIETY ON HIM, BECAUSE HE CARES FOR YOU” என்று (1 PETER) 1 பேதுரு 5:7-ல் காணப்படும் வேதப்பகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.

இவ்வுலகில், நாம் நம்பும் அல்லது நேசிக்கும் மனிதர்கள் நம்மை விசாரிக்காமல் போகலாம். ஆனால் நம்மை விசாரிக்க ஒருவர் உண்டு; அவர் தான் நம் அன்பின் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.

இன்றைக்கு அநேகருடைய வாழ்க்கையில் அதிகமாக சந்திக்கும் போராட்டங்களில் ஒன்று கவலை. இயேசு கிறிஸ்து, தன்னை பின்பற்றிவந்த ஜனங்களைப் பார்த்து ‘எதைக்குறித்தும் கவலைப்படாதிருங்கள்’ என்று சொன்னதாக மத்தேயு 6-ம் அதிகாரத்தில் பார்க்கிறோம்.

அப்போஸ்தலனாகிய பவுல் “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்” என்று பிலிப்பியர் 4:6-ல் அறிவுறுத்துகிறார்.

நம் குடும்பத்திலுள்ள பலவிதமான கவலைகளால் உண்டாகும் பாரத்தை நாமே சுமந்து கொண்டு சோர்ந்து, இளைப்படைந்து போய்விடுகிறோம். அனைத்தையும் ஏற்றுக்கொள்ள நம் கர்த்தர் ஆயத்தமாயிருக்கிறார்.

"கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு. அவர் உன்னை ஆதரிப்பார்" என்று சங்கீதம் 55:22-ல் கூறப்பட்டுள்ளது.

எனவே பிரியமானவர்களே, நம்மைப் பாரப்படுத்துகிற கவலைகளையெல்லாம் கர்த்தருடைய சமூகத்தில், விசுவாசத்தோடு இறக்கி வைத்து விடுவோம். அவரே நம்மை ஆறுதல்படுத்தி, கவலைகளை மாற்றி மகிழ்ச்சியைத் தந்தருளுவார்.

ஜெபம்: இந்த நாளின் வார்த்தையின்படியே, கர்த்தராகிய நீர் எங்களை விசாரித்து வழிநடத்துவதால், எங்கள் கவலைகள் யாவையும் உம் மீது வைத்துவிட எங்களுக்கு உதவிசெய்யும். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே...ஆமென்.

ஜெப தேவைகளுக்கும் ஆலோசனைகளுக்கும்
24/7- 9967228488
WhatsApp- 7400472200

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India
NMPF - Mumbai India

🔵⚪🔵2091-வது நாளின் காலைத்தியானம்  06/09/2026 !!!இந்த ஓய்வநாளின் காலைவேளையில், "மறுபடியும் உன்னைக் கட்டுவிப்பேன், நீ கட்ட...
05/09/2026

🔵⚪🔵2091-வது நாளின் காலைத்தியானம் 06/09/2026 !!!

இந்த ஓய்வநாளின் காலைவேளையில், "மறுபடியும் உன்னைக் கட்டுவிப்பேன், நீ கட்டப்படுவாய்" ...... "I WILL BUILD YOU UP AGAIN, AND YOU… WILL BE REBUILT" என்று (JEREMIAH) எரேமியா 31:4-ல் காணப்படும் வேதபகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.

இந்த உலகவாழ்வில் ஒரு சிலர், தங்களது குடும்பம், தொழில், வேலை, ஆவிக்குரிய ஜீவியம் என அனைத்திலும், ஒரு உயர்வான நிலையில் இருந்து, ஏதோ ஒரு வீழ்ச்சியை இன்று சந்தித்து, வாழ்க்கையே உடைந்து, நொறுங்கிப் போய் ஒரு கடினமான பாதையில் சென்று கொண்டிருக்கக்கூடும்.

நம் தேவனாகிய கர்த்தர், ஒவ்வொருவருடைய வாழ்க்கையையும் ‘மறுபடியும் கட்டி எழுப்புவேன், நீ கட்டப்படுவாய்’ என்று வாக்குக்கொடுக்கிறார்.

ரூத்தினுடைய வாழ்க்கையின் முதல் பகுதியிலே மிகப்பெரிய வீழ்ச்சி காணப்பட்டாலும், கர்த்தர் மீண்டும் அவளுடைய வாழ்க்கையைக் கட்டி எழுப்பினார். மிகுந்த ஆஸ்திக்காரனாகிய போவாஸை வாழ்க்கைத் துணையாய்த் தந்தருளினார். ரூத்தின் வம்சத்தில் தாவீதும், அதைத் தொடர்ந்து நம் அருமை இயேசு கிறிஸ்துவும் பிறந்ததாகப் பார்க்கிறோம்.

ஆமோஸ் 9:12-ல் “…. விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை நான் திரும்ப எடுப்பித்து, அதின் திறப்புகளை அடைத்து, அதில் பழுதாய்ப்போனதைச் சீர்ப்படுத்தி, பூர்வநாட்களில் இருந்ததுபோல அதை ஸ்தாபிப்பேன்” என்று இதைச் செய்கிற கர்த்தர் சொல்லியிருப்பதைப் பார்க்கிறோம்.

எனவே பிரியமானவர்களே,
இடிந்து போயிருக்கிற நம் வாழ்வை கர்த்தர் கரத்திலே ஒப்புக் கொடுப்போம். கர்த்தர் திரும்பவும் சிறப்பாய்க் கட்டியெழுப்பி, மேன்மையான வாழ்வைத் தந்து நம்மை கனப்படுத்துவார்.

ஜெபம்: இந்த நாளின் வார்த்தையின்படியே, எங்களை மறுபடியும் நீர் கட்டுவீர் என்றும், நாங்கள் கட்டப்பட்டு நிலைநிற்போம் என்றும் விசுவாசித்து ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே. ஆமென்.

ஜெப தேவைகளுக்கும், ஆலோசனைகளுக்கும்
24/7- 9967228488
WhatsApp- 7400472200

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India
NMPF - Mumbai India.

🔴⚪🔴 2090-வது நாளின் காலைத்தியானம்  05/09/2026 !!!இந்த காலைவேளையில், “என் மேன்மையைப் பெருகப்பண்ணி, என்னை மறுபடியும் தேற்ற...
04/09/2026

🔴⚪🔴 2090-வது நாளின் காலைத்தியானம் 05/09/2026 !!!

இந்த காலைவேளையில், “என் மேன்மையைப் பெருகப்பண்ணி, என்னை மறுபடியும் தேற்றுவீர்"...... "YOU WILL INCREASE MY HONOR AND COMFORT ME ONCE MORE" என்று (PSALM) சங்கீதம் 71:21-ல் காணப்படும் வேதபகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.

அநேக இக்கட்டுகளையும், ஆபத்துகளையும் கடந்து சென்ற சங்கீதக்காரன், கர்த்தரை நோக்கி, நீர் என்னை திரும்பவும் உயிர்ப்பித்து, திரும்பவும் என்னைப் பூமியின் பாதாளங்களிலிருந்து ஏறப்பண்ணி, என் மேன்மையைப் பெருகப்பண்ணி, என்னை மறுபடியும் தேற்றுவீர் என்று விசுவாசத்தோடு அறிக்கையிடுகிறார்.

இந்தநாளிலும், நமது அந்தஸ்து, பணம், பலன் போன்றவற்றை இழந்து, சோர்ந்து, துக்கத்தோடு தேற்றுவதற்கு யாருமின்றி திகைத்து நிற்கக்கூடும். நம் அன்பின் கர்த்தர், ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல நம்மைத் தேற்றி, இழந்துபோன மேன்மையை திரும்பவும் தந்து, உயர்த்தி கனப்படுத்துவார்.

வாழ்க்கையிலே இருள் சூழ்ந்து, இனி என்ன செய்வதென்று வழி தெரியாமல் இருக்கும் போது, வழிகாட்டும் வெளிச்சமாக நமக்கு முன்சென்று, நீதியின் பாதைகளில் நடத்தி, மற்றவர்கள் முன்னிலையில் நம்மை மேன்மைப்படுத்தி, உயர்ஸ்தலங்களில் ஏறப்பண்ணுகிறார்.

தாவீது, சங்கீதம் 23:3-ல் “அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்”என்று குறிப்பிடுகிறார்.

எனவே பிரியமானவர்களே, வாழ்விலே எப்படிப்பட்ட எதிரடையான சூழ்நிலைகளை சந்திக்க நேர்ந்தாலும், இயேசுவை அண்டிக்கொள்வோம். அவரே நமக்கு ஆறுதலையும், தேறுதலையும் தந்து, நம்மை கனப்படுத்துவார்.

ஜெபம்: இந்த நாளின் வார்த்தையின்படியே, கர்த்தராகிய நீர் எங்கள் மேன்மையைப் பெருகப்பண்ணி, எங்களை மறுபடியும் தேற்றுவீர் என்று உம்மை விசுவாசித்து ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே…. ஆமென்.

ஜெப தேவைகளுக்கும் ஆலோசனைகளுக்கும்
24/7- 9967228488
WhatsApp- 7400472200

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India.
NMPF - Mumbai India

Address

Navi Mumbai

Telephone

00919967228488

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sharon Global Revival Ministries & Navi Mumbai Prayer Fellowship posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sharon Global Revival Ministries & Navi Mumbai Prayer Fellowship:

Shortcuts

Share