Sharon Global Revival Ministries & Navi Mumbai Prayer Fellowship

Sharon Global Revival Ministries & Navi Mumbai Prayer Fellowship THE OFFICIAL FACEBOOK PAGE OF SHARON GLOBAL REVIVAL MINISTRIES & NAVI MUMBAI PRAYER FELLOWSHIP

Brief Information about Dr. R S A Williams – Founder & President of SGRM/ NMPF
(An anointed servant of God carrying Lord’s word in Tamil & English across the Globe)

- Motivational Speaker to Global Audience on Management Subjects (with Biblical base)
- Anointed Speaker on Evangelism and Spiritual Topics
- Faculty in Seminars/ Retreats and Conventions with the guidance of Holy Sp

irit
- Management Expert specialised in Global Logistics

Spiritual Background and Services to the Lord with Global Span Coverage
• Commenced Lord’s ministry during the year 1988
• Celebrating completion of the 25th year of ministry in this blessed year 2013
• Balanced the ministry with Corporate Career judiciously for 20 years and entered into full time ministry during the year 2007 spanning 6 years now (25 years of glorious ministry in His Vineyard). We are into –
• Ministry among corporate personnel/ politicians & bureaucrats
• Ministry among churches across nations without denominational barrier
• Miracle all night prayer ministry
• Bible study and seminar ministry
• Ministry of personal evangelism
• Ministry among families/ women/ youth & children
• E-mail ministry
• E-magazine ministry
• Television ministry
• Crusade ministry
• Hospital ministry
• Cottage prayer ministry
• Travelled and ministered in more than 17 countries
• Carrying Lord’s word across India and around the Globe with Love and Compassion

Educational Background
• Bachelors Degree in Law/ Bachelors Degree in Arts
• Masters Degree in Business Management
• Masters Degree in Theology
• PG Diploma in Transport Management/ PG Diploma in Personal Management & Industrial Relations
• Honorary Doctorate Degree

Service Background with Industries in India & abroad
• Commenced corporate career with Tata Group immediately after completion of Education and had an opportunity serving with prominent Blue Chip companies by availing more exposure in Logistics field holding designations right from OFFICER to EXECUTIVE DIRECTOR.
• The Industries served are -
Tea Industry
Paper Industry
Steel Industry
Shipping Industry
Logistics Industry
Media Industry
• Served in Belgium (Europe) as a Vice President/ Director Europe Operations for an Indian MNC and travelled extensively around the world spanning more than 16 countries.
• Left worldly job during the year 2007 and serving the Lord within India and across the globe thereafter on a full time basis. Address & Contact Coordinates
..... Presently settled in Mumbai by having base in Kharghar, Navi Mumbai - Maharastra

Dr. R S A Williams - Founder & President
Sharon Global Revival Ministries & Navi Mumbai Prayer Fellowship
C-1002, Tharwani Heritage, Sector 7, Kharghar, Navi Mumbai – 410 210 Tel. +91 22 2774 9200
Mob. +91 99672 28488
E-mail: [email protected] [email protected]
FB: www.facebook.com/sgrm.nmpf

🔴⚪ 🔴 2009-வது நாளின் காலைத்தியானம் 16/06/2026 !!!இந்த காலைவேளையில், "உன் இருதயம் அதிசயப்பட்டு பூரிக்கும்" …... "YOUR HEA...
15/06/2026

🔴⚪ 🔴 2009-வது நாளின் காலைத்தியானம் 16/06/2026 !!!

இந்த காலைவேளையில், "உன் இருதயம் அதிசயப்பட்டு பூரிக்கும்" …... "YOUR HEART WILL BE THRILLED WITH JOY” என்று (ISAIAH) ஏசாயா 60:5-ல் காணப்படும் வேதபகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.

நமது சரீரத்தின் உறுப்பான இருதயம், நம் சரீரம் முழுவதையும் சுகமாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது போல, நமது இருதயத்தின் நினைவுகள் நமது ஆத்துமாவை மகிழ்ச்சியாய் வைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது என்பதை நாம் அறிவோம்.

நம் அன்பின் தேவன், நமது இருதயத்தின் நினைவுகளை ஆராய்ந்து அறிந்து, இருதயத்தின் விருப்பங்களை நிறைவேற்றுகிறவர். அவர்மேல் விசுவாசம் வைக்கிறவர்களுடைய வாழ்வில் அற்புதமும், அதிசயமும் காணச்செய்து, இருதயம் மகிழ்ந்து பூரிப்படையும்படிச் செய்கிறார்.

அன்னாளுக்கோ குழந்தை இல்லாததால் அவளுடைய இருதயம் துக்கத்தால் நிறைந்திருந்தது. அவள் கர்த்தருடைய ஆலயத்திற்குச் சென்று, மனங்கசந்து மிகவும் அழுது, தன் இருதயத்திலே கர்த்தரோடு பேசி, அவருடைய சந்நிதியில் தன் இருதயத்தை ஊற்றி விண்ணப்பம் பண்ணினாள்.

தமது பிள்ளைகளின் இருதயத்தின் காயத்தைக் கட்டுகிற கர்த்தர், சாமுவேல் என்ற ஒரு குழந்தையைக் கொடுத்து அன்னாளை ஆசீர்வதித்தார் என்று 1சாமுவேல் 1-ம் அதிகாரத்தில் பார்க்கிறோம்.

ஆம், அன்னாள் “என் இருதயம் கர்த்தருக்குள் களிகூருகிறது” என்று நன்றியறிதலோடு கர்த்தரை மகிமைப்படுத்தியதாக 1 சாமுவேல் 2:1-ல் பார்க்கிறோம்.

எனவே பிரியமானவர்களே, நம் வாழ்விலும், நம் இருதயத்தை பாரப்படுத்திக் கொண்டிருக்கிற எதுவானாலும், கர்த்தருடைய சமுகத்தில் கொண்டு வருவோம். நிச்சயமாகவே கர்த்தர் அதிசயத்தைக் காணச்செய்து, நம் இருதயம் பூரிப்படையச் செய்வார்.

ஜெபம்: எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே, இந்த நாளின் வார்த்தையின்படியே, உமது செய்கைகளால் எங்கள் இருதயம் அதிசயப்பட்டு பூரிக்கும் என்பதை விசுவாசித்து ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே....ஆமென்.

ஜெப தேவைகளுக்கும் ஆலோசனைகளுக்கும்
24/7 - 9967228488
WhatsApp 74004 72200

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India
NMPF - Mumbai India.

🟠⚪🟠 2008-வது நாளின் காலைத்தியானம்  15/06/2026 !!!இந்த காலைவேளையில், "நான் உன்னைப் பத்திரமாய்ப் பார்த்துக்கொள்வேன்" …... ...
14/06/2026

🟠⚪🟠 2008-வது நாளின் காலைத்தியானம் 15/06/2026 !!!

இந்த காலைவேளையில், "நான் உன்னைப் பத்திரமாய்ப் பார்த்துக்கொள்வேன்" …... "I WILL LOOK WELL UNTO THEE” என்று (JEREMIAH) எரேமியா 40:4-ல் காணப்படும் வேதப்பகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.

பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான், எரேமியா தீர்க்கதரிசியைப் பார்த்து: ‘…. நீ என்னோடு
பாபிலோனுக்கு வா, உன்னைப் பத்திரமாய் பார்த்துக் கொள்ளுவேன்” என்று அவர்மீது தயை பாராட்டி, அன்போடு கூறியதாக இந்தநாளின் தியானபகுதி குறிப்பிடுகிறது.

கர்த்தர் தம்முடைய ஊழியக்காரர்களை நேசித்து, போஷித்து பாதுகாக்கிறார். அவர்கள் அனுபவிக்கிற பாடுகளையும் துக்கங்களையும் நீக்கி, சிறையிருப்பை மாற்றி மகிழப்பண்ணுவார்.

நம் வாழ்க்கையிலும், நாம் எதிர்பார்த்தவர்களிடமிருந்து இரக்கம் கிடைக்காமல் போயிருக்கலாம். சோர்ந்து போக வேண்டாம். எதிர்பாராதவர்களிடமிருந்து கர்த்தர் நமக்கு உதவியைத் தருவார்.

மோசே பிறந்த நாட்களிலே, இஸ்ரவேல் ஜனங்களுக்குள்ளே பிறக்கும் ஆண் குழந்தைகள் யாவும் கொல்லப்பட வேண்டும் என்று எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் கொடூரமான சட்டத்தினை பிறப்பித்திருந்தான்.

மோசேயின் பெற்றோர் பிள்ளையை ஒளித்து வைக்கக்கூடாமல், நாணல் பெட்டியில் வைத்து நதியோரமாக வைத்தார்கள். பார்வோனின் குமாரத்தி ஸ்நானம்பண்ண வரும்போது, அவனை எடுத்துத் தனக்குப் பிள்ளையாக வளர்த்தாள். ஆம், குழந்தையாகிய மோசே பத்திரமாய் பாதுகாக்கப்பட்டான் என்று யாத்திராகமம் 2:1-10-ல் பார்க்கிறோம்

எனவே பிரியமானவர்களே, நாம் கர்த்தரை உண்மையாய் பின்பற்றுவோம். எந்தவொரு ஆபத்தும் நேரிடாமல் பத்திரமாய் பார்த்துக் கொள்வார். ஆகவே தைரியமடைவோம்.

ஜெபம்: எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே, இந்த நாளின் வார்த்தையின்படியே, தேவனாகிய நீர் எங்களைப் பத்திரமாகப் பாதுகாத்து வழிநடத்த ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே.... ஆமென்.

ஜெப தேவைகளுக்கும் ஆலோசனைகளுக்கும்
24/7 - 9967228488
WhatsApp 7400472200.

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India
NMPF - Mumbai India

🟡⚪🟡2007-வது நாளின் காலைத்தியானம் ... 14/06/2026 !!!இந்த  ஓய்வுநாளின் காலைவேளையில், "மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவ...
13/06/2026

🟡⚪🟡2007-வது நாளின் காலைத்தியானம் ... 14/06/2026 !!!

இந்த ஓய்வுநாளின் காலைவேளையில், "மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்" .... "MAN SHALL NOT LIVE ON BREAD ALONE, BUT ON EVERY WORD THAT COMES FROM THE MOUTH OF GOD"என்று (LUKE) லூக்கா 4:4-ல் காணப்படும் வேதப்பகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.

இயேசு நாற்பது நாட்கள் உபவாசமாயிருந்த பின்பு, பசியுண்டாயிருந்த வேளையில், சோதனைக்காரனாகிய பிசாசு அவரிடம் வந்து, கல்லுகளை அப்பங்களாக மாற்றும்படி கூறினான். அப்பொழுது இயேசு, இந்தநாளின் தியானபகுதியைக் கூறியதாகப் பார்க்கிறோம்.

நம் உடலின் தேவைகளுக்கு 'அப்பம்' (உணவு) எவ்வளவு அவசியமோ, அதேபோல் ஆன்மீக வளர்ச்சிக்கு தேவனுடைய வார்த்தை இன்றியமையாதது.

இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்தரத்தில் அலைந்து திரிந்த 40 ஆண்டுகளில் தேவனே அவர்களுக்கு மன்னாவைக் கொடுத்து போஷித்தார்.

மன்னாவை உண்டவர்கள் அனைவரும் இறுதியில் மரித்தார்கள். அந்த மன்னா அவர்களுக்கு நித்திய ஜீவனைக்கொடுக்கவில்லை. "உங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள்" என்று இயேசு சொன்னதாக யோவான் 6:49-ல் பார்க்கிறோம்.

இயேசுகிறிஸ்து, தமது மாம்சத்தையும் இரத்தத்தையும் பலியாக ஒப்புக் கொடுத்தார். அவரை விசுவாசிப்பவர்கள் ஆன்மீக மரணத்தை அடையாமல், நித்திய ஜீவனை அடைவார்கள். “ஜீவ அப்பம் நானே” என்று யோவான் 6:49-ல் இயேசு கூறியுள்ளார்.

எனவே பிரியமானவர்களே, தேவனுடைய வார்த்தையை வாசிப்பது, தியானிப்பது மாத்திரமல்ல, அதின்படி வாழ்ந்து நித்திய ஜீவனைப் பெற்று அனுபவிப்போம்.

ஜெபம்: எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே, இந்த நாளின் வார்த்தையின்படியே, மனுஷர்களாகிய நாங்கள் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனாகிய உமது ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்போம் என்பதை விசுவாசித்து ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே....ஆமென்.

ஜெப தேவைகளுக்கும், ஆலோசனைகளுக்கும் 24/7-9967228488
WhatsApp-74004 72200.

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India
NMPF - Mumbai India

🟤⚪🟤2006-வது நாளின் காலைத்தியானம் ... 13/06/2026 !!!இந்த காலைவேளையில், "மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் க...
12/06/2026

🟤⚪🟤2006-வது நாளின் காலைத்தியானம் ... 13/06/2026 !!!

இந்த காலைவேளையில், "மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும்"...."MANY ARE THE PLANS IN A PERSON'S HEART, BUT IT IS THE LORD'S PURPOSE THAT PREVAILS" என்று (PROVERBS) நீதிமொழிகள் 19:21-ல் காணப்படும் வேதப்பகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.

உலக மனிதர்களாகிய நாம், பல இலக்குகளையும், திட்டங்களையும் நம் மனதில் கொண்டு, அதையே சிந்தித்து செயல்படுகிறோம். நாம் எடுக்கும் முயற்சிகள் தோல்வியடையும் போது, வருந்தாமல், நம்முடைய சொந்த விருப்பங்களை விட, தேவனின் திட்டமும், நோக்கமும் சிறந்தது என்று உணர்ந்து நம்மை அவரிடம் ஒப்படைப்போம்.

ஆம், எரேமியா 32:19-ல் “சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ள தேவனே, யோசனையிலே பெரியவரும், செயலிலே வல்லவருமாயிருக்கிறீர்” என்று கூறப்பட்டிருப்பதை பார்க்கிறோம்.

யோசேப்பின் சகோதரர்கள், அவனை அடிமையாக விற்று, அவனது வாழ்க்கையை அழிக்க எண்ணினார்கள். எகிப்தில் பல சோதனைகளையும்,
துன்பங்களையும் யோசேப்பு சந்தித்தாலும் கர்த்தருடைய சித்தத்தின்படி, ஏற்ற நாளிலே எகிப்தின் அதிபதியானார். சகோதரர்களுடைய தீமையான திட்டங்களை கர்த்தர் நன்மையாக மாற்றினார் என்று ஆதியாகமம் 50:20-ல் பார்க்கிறோம்.

“மனிதன் சூரியனுக்குக்கீழே படுகிற எல்லாப் பிரயாசத்தினாலும் அவனுடைய இருதயத்தின் எண்ணங்களினாலும் அவனுக்குப் பலன் என்ன?” என்று பிரசங்கி 2:22-ல் கூறப்பட்டுள்ளது.

எனவே பிரியமானவர்களே, இந்த நாளிலும், நம் எண்ணங்களைக் கர்த்தரிடத்தில் ஒப்புவிப்போம். நமக்கு ஆசீர்வாதமாக இருக்கும் தமது நல்திட்டங்களை கர்த்தர் நம் வாழ்வில் நிறைவேற்றுவார்.

ஜெபம்: எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே, இந்த நாளின் வார்த்தையின்படியே, மனுஷர்களாகிய எங்களது இருதயத்தின் எண்ணங்கள் அநேகமாயிருந்தாலும், கர்த்தராகிய உமது யோசனையே நிலைநிற்கும் என்பதை விசுவாசித்து ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே....ஆமென்.

ஜெப தேவைகளுக்கும், ஆலோசனைகளுக்கும் 24/7-9967228488.
WhatsApp- 74004 72200.

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India
NMPF - Mumbai India

🔵⚪🔵2005-வது நாளின் காலைத்தியானம் 12/06/2026 !!!இந்த காலைவேளையில், "வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்...
11/06/2026

🔵⚪🔵2005-வது நாளின் காலைத்தியானம் 12/06/2026 !!!

இந்த காலைவேளையில், "வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்" …... "SEE IF THERE IS ANY OFFENSIVE WAY IN ME, AND LEAD ME IN THE WAY EVERLASTING" என்று (PSALM) சங்கீதம் 139:24-ல் காணப்படும் வேதப்பகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.

பொதுவாக நாமெல்லாரும் மற்றவர்கள் பிழைகளையும், குற்றங்களையும் மட்டுமே பார்க்கிறவர்களாக காணப்படுகிறோம். நம்முடைய தவறுகளை உணருவதேயில்லை.
சில நேரங்களில் நமது செயல்கள் நம்மை அறியாமலேயே மற்றவர்களுக்கு வேதனையைத் தரக்கூடும்.

வேதத்திலே இளையகுமாரன், தன் தகப்பனுடைய ஆஸ்தியில் தனது பங்கை சேர்த்துக் கொண்டு, தூரதேசத்துக்குப் புறப்பட்டுப்போய், கர்த்தருக்கும், தகப்பனுக்கும் விரோதமாக, துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான்.

தேசத்திலே கொடிய பஞ்சம். எல்லாவற்றிலும் குறைவுபடத் தொடங்கியபோது, பன்றிகளை மேய்க்கும் அளவுக்குத் தாழ்த்தப்பட்டான். ஒருநாளிலே, அவனுக்கு புத்தி தெளிந்தபோது, தன் தவறை உணர்ந்து, தன் தகப்பனிடம் திரும்பி வந்தான். தகப்பன் அன்போடு அவனை ஏற்றுக் கொண்டார். இதனை லூக்கா 15:11 முதல் 32 வரை பார்க்கிறோம்

நாம் அறியாமலேயே கர்த்தரை வேதனைப்படுத்தும் சுயநலம், கீழ்ப்படியாமை, கோபம், எரிச்சல், பெருமை போன்ற குணங்கள் இருக்குமானால், தாவீது கர்த்தரை நோக்கி முறையிட்டதுபோல, நாமும் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவோம். அவர் நம்மைப் பரிசுத்தப்படுத்தி, பரலோகத்திற்கு நேராக நித்திய வழியில் நடத்திச் செல்வார்.

எனவே பிரியமானவர்களே, கர்த்தரை மற்றும் மனிதரை துக்கப்படுத்துகிற அனைத்து காரியங்களையும் விட்டு விலகிவிடுவோம். அப்போது கர்த்தர் நம்மை ஆசீர்வதித்து உயர்த்துவார்.

ஜெபம்: எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே, இந்த நாளின் வார்த்தையின்படியே, எங்களில் வேதனை உண்டாக்கும் வழி உண்டோ என்று பார்த்து நித்திய வழியிலே சிறப்பாக நீர் எங்களை வழிநடத்த ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே....ஆமென்.

ஜெப தேவைகளுக்கும், ஆலோசனைகளுக்கும் 24/7-9967228488
WhatsApp- 74004 72200.

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India
NMPF - Mumbai India

🔴⚪🔴 2004-வது நாளின் காலைத்தியானம் ... 11/06/2026 !!!இந்த  நாளின் காலைவேளையில், "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிற...
10/06/2026

🔴⚪🔴 2004-வது நாளின் காலைத்தியானம் ... 11/06/2026 !!!

இந்த நாளின் காலைவேளையில், "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்" …... "I AM THE WAY AND THE TRUTH AND THE LIFE" என்று (JOHN) யோவான் 14:6-ல் காணப்படும் வேதப்பகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.

இயேசுவே வழி:
நம் வாழ்க்கையின் குழப்பங்கள் நிறைந்த பாதையில், எங்கு செல்வது என்று தெரியாமல் தவிக்கும் போது, இயேசுவே நமக்கு சரியான வழியை காட்டுகிறார். மட்டுமல்ல, வழியைப் பிரகாசிக்கச் செய்கிறார். அவரே நம் பரம பிதாவின் சந்நிதிக்கு நம்மை அழைத்துச் செல்லும் பாதையாகவும் இருக்கிறார்.

இயேசுவே சத்தியம்: பொய்களும் ஏமாற்றங்களும் நிறைந்த இந்த உலகத்தில், இயேசுவே மாறாத உண்மையாகவும், நம் வாழ்விலே வார்த்தையாகவும் இருக்கிறார். அவர் ஒருபோதும் பொய் சொல்லாதவர். அவருடைய வார்த்தைகள் நமது இருதயத்திற்கு சமாதானத்தையும், மன உறுதியையும் தருகின்றன.

யோவான் 8:32-ல் “சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்று இயேசு சொன்னதாக காண்கிறோம்.

இயேசுவே ஜீவன்:
நம் இயேசு, நித்திய ஜீவனை அளிப்பவர் மட்டுமல்ல, இந்த பூமிக்குரிய வாழ்க்கையிலும் நாம் புதுப்பெலன் பெற்று, பரிபூரணமான வாழ்வை பெற்று அனுபவிக்க ஜீவனைக் கொடுக்கிறார்.

“அவருக்குள் (இயேசுவுக்குள்) ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது” என்று யோவான் 1:4-ல் பார்க்கிறோம்.

எனவே பிரியமானவர்களே, இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்வோம். அவரே நமக்கு வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருந்து, அவரோடு மகிமையில் பிரவேசிக்கும் அனுபவத்தையும் பெற்று நித்திய நித்தியமாய் அவரோடு மகிழ்ந்து வாழ்ந்திருக்க உதவி செய்வார்.

ஜெபம்: எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே, இந்த நாளின் வார்த்தையின்படியே, நீரே எங்களுக்கு வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறீர் என்பதை விசுவாசித்து ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே....ஆமென்.

ஜெப தேவைகளுக்கும், ஆலோசனைகளுக்கும்
24/7 - 9967228488.
WhatsApp 74004 72200

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India
NMPF - Mumbai India

🟢⚪🟢 2003-வது நாளின் காலைத்தியானம் 10/06/2026 !!!இந்த நாளின் காலைவேளையில், "நீ வருகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்; நீ...
09/06/2026

🟢⚪🟢 2003-வது நாளின் காலைத்தியானம் 10/06/2026 !!!

இந்த நாளின் காலைவேளையில், "நீ வருகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்; நீ போகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்"…… "YOU WILL BE BLESSED WHEN YOU COME IN AND BLESSED WHEN YOU GO OUT" என்று (DEUTERONOMY) உபாகமம் 28:6-ல் காணப்படும் வேதபகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.

கர்த்தருடைய சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுத்து, அவர் கட்டளைகளின்படி நடக்கும்போது, உபாகமம் 28:3-14-ல் கூறப்பட்டுள்ள அனைத்து ஆசீர்வாதங்களும் நம்மேல் வந்து பலிக்கும் என்பதை நாம் அறிவோம்.

அந்த ஆசீர்வாதங்களில் ஒன்றுதான் இந்தநாளின் தியான வசனமாகும். தேவனுடைய பிள்ளைகள் எங்கு சென்றாலும் அவருடைய ஆசீர்வாதமும், பாதுகாப்பும் அவர்களோடு இருக்கும் என்பதை நினைவூட்டுகிறது.

சங்கீதம் 121:8-ல், “கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்கும் காப்பார்" என்று வாசிக்கிறோம்.

நமது கல்வி, வேலை, தொழில், குடும்பம், ஊழியம் என எந்த நோக்கத்திற்காக நாம் வெளியே சென்றாலும், எந்த புதிய இடத்திற்கு சென்றாலும் கர்த்தருடைய பிரசன்னம் நம்மை வழிநடத்தும். நாம் எங்கு செல்கிறோமோ, அங்குள்ள அனைவரும் நம்மூலம் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.

மோசே, யோசுவா, காலேப் போன்றவர்கள் கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றியதுபோல், நாமும் அவருக்குக் கீழ்ப்படிந்து வாழும்போது, நாம் கால் மிதித்த தேசம் நமக்கும், நம் பிள்ளைகளுக்கும் என்றைக்கும் சுதந்தரமாயிருக்கும் என்பது உண்மை. இதனை யோசுவா 1:3,14:9-ல் பார்க்கிறோம்.

எனவே பிரியமானவர்களே, கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிகொடுத்து வாழ்வோம். நாம் செல்லுகிற பயணங்களிலெல்லாம் தேவஆசீர்வாதத்தை காண கர்த்தர் உதவி செய்வார்.

ஜெபம்: எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே, இந்த நாளின் வார்த்தையின்படி நாங்கள் வருகையிலும் போகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய் வாழ உதவி செய்யும். எங்கள் வழிகளை நடத்தி, எங்களைப் பலருக்கு ஆசீர்வாதமாக மாற்றும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம். ஆமென்.

ஜெப தேவைகளுக்கும், ஆலோசனைகளுக்கும்
24/7 – 9967228488
WhatsvApp 74004 72200

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM- Chennai India
NMPF- Mumbai India

🔴⚪🔴2002-வது நாளின் காலைத்தியானம்  09/06/2026 !!!இந்த காலைவேளையில், "கிறிஸ்து உங்களுக்கு மன்னித்துபோல, ஒருவருக்கொருவர் மன...
08/06/2026

🔴⚪🔴2002-வது நாளின் காலைத்தியானம் 09/06/2026 !!!

இந்த காலைவேளையில், "கிறிஸ்து உங்களுக்கு மன்னித்துபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்" ….. “REMEMBER THE LORD FORGAVE YOU, SO YOU MUST FORGIVE OTHERS” என்று (COLOSSIANS) கொலோசெயர் 3:13-ல் காணப்படும் வேதபகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.

கிறிஸ்து நமது பாவங்களை நிபந்தனையின்றி மன்னித்ததுபோல, நாமும் மற்றவர்களின் தவறுகளை முழுமையாக மன்னிக்க வேண்டும் என்று வேதாகமம் வலியுறுத்துகிறது.

மன்னிப்புக் கேட்பதும், மன்னிப்புக் கொடுப்பதும் மனிதர்களுக்கு எளிதான காரியம் அல்ல. தவறு செய்ததை அறிந்திருந்தாலும் அதை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்க பலர் தயங்குகிறார்கள். அதுபோல, தன் தவறை உணர்ந்து வருகின்ற மனிதனை, மன்னித்து ஏற்றுக்கொள்வதும் பலருக்கு கடினமாக இருக்கிறது.

நாம் அனைவரும் தவறு செய்கிறவர்களே. ஆனால் நமது தவறுகளை உணர்ந்து, சம்பந்தப்பட்டவரிடம் மன்னிப்புக் கேட்டு சீர்பொருந்திக்கொள்வது நல்ல சாட்சியாகும். அதேபோல், மன்னிப்புக் கேட்பவரை மன்னித்து ஏற்றுக்கொள்வது தேவ அன்பின் வெளிப்பாடாகும்.

மத்தேயு 6:14-ல், "மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்" என்று ஆண்டவர் போதிக்கிறார்.

எனவே பிரியமானவர்களே, சிலுவையில் தம்மையே தியாகம் செய்து, நம்மை மன்னித்த கிறிஸ்துவைப் போல, நம் இருதயத்திலுள்ள கசப்புகளை அகற்றி, மற்றவர்களின் குற்றங்களை மனதார மன்னிப்போம். மன்னிப்பு மன சமாதானத்தையும் தேவனுடைய ஆசீர்வாதத்தையும் நமக்குக் கொண்டுவரும்.

ஜெபம்: எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே, இந்த நாளின் வார்த்தையின்படியே, கிறிஸ்துவாகிய நீர் எங்களுக்கு மன்னித்ததுபோல, நாங்களும் ஒருவருக்கொருவர் மன்னிக்க எங்களுக்கு உதவிசெய்யும்படி ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே. ஆமென்.

ஜெப தேவைகளுக்கும், ஆலோசனைகளுக்கும்
24/7 - 9967228488.
WhatsApp 74004 72200

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India
NMPF - Mumbai India

🟤⚪🟤2001-வது நாளின் காலைத்தியானம்  08/06/2026 !!!இந்த காலைவேளையில், "நாம் கிரகிக்ககூடாத பெரியகாரியங்களை அவர் செய்கிறார்" ...
07/06/2026

🟤⚪🟤2001-வது நாளின் காலைத்தியானம் 08/06/2026 !!!

இந்த காலைவேளையில், "நாம் கிரகிக்ககூடாத பெரியகாரியங்களை அவர் செய்கிறார்" ..... "HE DOES GREAT THINGS BEYOND OUR UNDERSTANDING” என்று (JOB) யோபு 37:5-ல் காணப்படும் வேதபகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.

இந்த உலகத்தில் அறிவியல், எத்தனையோ மடங்கு பெருகினாலும், கர்த்தருடைய செயல்களை ஒருவராலும் ஆராய்ந்து முடியாது. மனித அறிவுக்கும் மற்றும் புரிதலுக்கும் அப்பாற்பட்ட விதத்திலே மகாபெரிய காரியங்களை நம் கர்த்தர் செய்கிறார்.

தேவனுடைய வார்த்தையினால் உலகம் உண்டானது, மண்ணிலிருந்து மனுஷனை உருவாக்கினது, செங்கடல் இரண்டாகப் பிளந்தது, யோர்தான் நதி குவிந்தது, மரித்தவன் உயிரடைந்தது, இன்னும் எத்தனையோ நமது அறிவுக்கு எட்டாத காரியங்களை நம் கர்த்தர் செய்திருக்கிறார்.

நடக்கவே நடக்காது, சாத்தியமே இல்லை என்று நாம் நினைக்கும் காரியங்கள் எல்லாம் நம் தேவனால் மிக சாதாரணமாக, எளிதாக நடந்திருப்பதைக் காணமுடிகிறது.

பக்தன் யோபு “ஆராய்ந்து முடியாத பெரியகாரியங்களையும் எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்” என்று யோபு 9:10-ல் கூறியுள்ளார்.

நம் வாழ்விலும் படிப்பில் வெற்றி, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம், மனசமாதானம், கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை என அனைத்தும் கிடைக்குமா என்ற சந்தேகங்கள் நம் உள்ளத்தில் இருக்கக்கூடும். மனிதனால் இது கூடாததுதான், தேவனால் எல்லாம் கூடும்.

எனவே பிரியமானவர்களே, எல்லா சூழ்நிலைகளிலும், விசுவாசத்தோடு கர்த்தரை நோக்கிப் பார்ப்போம். நிச்சயமாகவே நாம் கிரகிக்கக்கூடாத பெரிய காரியங்களை, கர்த்தர் நம் வாழ்வில் செய்து நம்மை நிறைவாய் ஆசீர்வதிப்பார்.

ஜெபம்: எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே, இந்த நாளின் வார்த்தையின்படியே, நாங்கள் கிரகிக்கக்கூடாத பெரியக்காரியங்களை கர்த்தராகிய நீர் எங்களுக்குச் செய்கிறீர் என்பதை விசுவாசித்து ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே. ஆமென்.

ஜெப தேவைகளுக்கும், ஆலோசனைகளுக்கும்
24/7 - 9967228488.
WhatsApp 74004 72200

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India
NMPF - Mumbai India

🟢⚪🟢2000-வது நாளின் காலைத்தியானம் 07/06/2026 !!!இந்த ஓய்வுநாளின் காலைவேளையில், “அப்பொழுது நீங்கள் கூடிவந்து, என்னைத் தொழு...
06/06/2026

🟢⚪🟢2000-வது நாளின் காலைத்தியானம் 07/06/2026 !!!

இந்த ஓய்வுநாளின் காலைவேளையில், “அப்பொழுது நீங்கள் கூடிவந்து, என்னைத் தொழுதுகொண்டு, என்னை நோக்கி விண்ணப்பம் பண்ணுவீர்கள்; நான் உங்களுக்குச் செவிகொடுப்பேன்"…... "THEN YOU WILL CALL ON ME AND COME AND PRAY TO ME, AND I WILL LISTEN TO YOU” என்று (JEREMIAH) எரேமியா 29:12-ல் காணப்படும் வேதபகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.

நம் வாழ்வில் தனி ஜெபம் சிறந்தது என்றாலும் குடும்பமாக, விசுவாசிகளாக அல்லது சபையாக கூடி இணைந்து, தேவனை நோக்கி விண்ணப்பம் பண்ணும்போது, தேவனுடைய பிரசன்னம் நம்மை நிரப்புகிறது. அவர் செவிகொடுத்து பெரிய காரியங்களைச் செய்கிறார்.

மத்தேயு 18:20-ல் “ஏனெனில், இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன்” என்று இயேசு கூறியுள்ளார்.

ஏரோது ராஜா, பேதுருவை சிறைச்சாலையில் அடைத்து வைத்தபோது, சபையார் அனைவரும் கூடி, அவனுக்காகத் தேவனை நோக்கி ஊக்கத்தோடு ஜெபம்பண்ணினார்கள் என்று அப்போஸ்தலர் 12: 5 மற்றும்12-ல் பார்க்கிறோம்.

சபையாரின் விண்ணப்பத்தை கர்த்தர் கேட்டு, ஒரு தூதனை சிறைச்சாலைக்கு அனுப்பி, பேதுருவின் விலங்குகளைத் தளர்த்தி, அற்புதமாக விடுதலையாக்கினார்.

நமது இக்கட்டான சூழ்நிலைகளில், குடும்பமாக ஒருமனப்பட்டு ஜெபிக்கும்போது, நாம் வேண்டிக்கொள்ளுகிற காரியம் பரலோகப் பிதாவினால் நமக்கு உண்டாகும் என்று பார்க்கிறோம்.

எனவே பிரியமானவர்களே, இந்த ஓய்வுநாளிலும், ஆலயத்திற்குச் சென்று, கர்த்தரை தொழுதுகொண்டு, நமது தேவைகளுக்காக விண்ணப்பம் செய்வோம். நிச்சயமாகவே நமது ஜெபத்திற்கு பதில் உண்டு.

ஜெபம்: எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே, இந்த நாளின் வார்த்தையின்படியே, நாங்கள் கூடிவந்து உம்மைத் தொழுதுகொண்டு, உம்மை நோக்கிக் விண்ணப்பம் பண்ணும்பொழுது; நீர் எங்களுக்குச் செவிகொடுப்பீர் என்பதை விசுவாசித்து ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே....ஆமென்.

ஜெப தேவைகளுக்கும் ஆலோசனைகளுக்கும்
24/7- 9967228488 WhatsApp-7400472200

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India
NMPF - Mumbai India

Address

Navi Mumbai

Telephone

00919967228488

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sharon Global Revival Ministries & Navi Mumbai Prayer Fellowship posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sharon Global Revival Ministries & Navi Mumbai Prayer Fellowship:

Share