15/06/2026
🔴⚪ 🔴 2009-வது நாளின் காலைத்தியானம் 16/06/2026 !!!
இந்த காலைவேளையில், "உன் இருதயம் அதிசயப்பட்டு பூரிக்கும்" …... "YOUR HEART WILL BE THRILLED WITH JOY” என்று (ISAIAH) ஏசாயா 60:5-ல் காணப்படும் வேதபகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.
நமது சரீரத்தின் உறுப்பான இருதயம், நம் சரீரம் முழுவதையும் சுகமாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது போல, நமது இருதயத்தின் நினைவுகள் நமது ஆத்துமாவை மகிழ்ச்சியாய் வைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது என்பதை நாம் அறிவோம்.
நம் அன்பின் தேவன், நமது இருதயத்தின் நினைவுகளை ஆராய்ந்து அறிந்து, இருதயத்தின் விருப்பங்களை நிறைவேற்றுகிறவர். அவர்மேல் விசுவாசம் வைக்கிறவர்களுடைய வாழ்வில் அற்புதமும், அதிசயமும் காணச்செய்து, இருதயம் மகிழ்ந்து பூரிப்படையும்படிச் செய்கிறார்.
அன்னாளுக்கோ குழந்தை இல்லாததால் அவளுடைய இருதயம் துக்கத்தால் நிறைந்திருந்தது. அவள் கர்த்தருடைய ஆலயத்திற்குச் சென்று, மனங்கசந்து மிகவும் அழுது, தன் இருதயத்திலே கர்த்தரோடு பேசி, அவருடைய சந்நிதியில் தன் இருதயத்தை ஊற்றி விண்ணப்பம் பண்ணினாள்.
தமது பிள்ளைகளின் இருதயத்தின் காயத்தைக் கட்டுகிற கர்த்தர், சாமுவேல் என்ற ஒரு குழந்தையைக் கொடுத்து அன்னாளை ஆசீர்வதித்தார் என்று 1சாமுவேல் 1-ம் அதிகாரத்தில் பார்க்கிறோம்.
ஆம், அன்னாள் “என் இருதயம் கர்த்தருக்குள் களிகூருகிறது” என்று நன்றியறிதலோடு கர்த்தரை மகிமைப்படுத்தியதாக 1 சாமுவேல் 2:1-ல் பார்க்கிறோம்.
எனவே பிரியமானவர்களே, நம் வாழ்விலும், நம் இருதயத்தை பாரப்படுத்திக் கொண்டிருக்கிற எதுவானாலும், கர்த்தருடைய சமுகத்தில் கொண்டு வருவோம். நிச்சயமாகவே கர்த்தர் அதிசயத்தைக் காணச்செய்து, நம் இருதயம் பூரிப்படையச் செய்வார்.
ஜெபம்: எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே, இந்த நாளின் வார்த்தையின்படியே, உமது செய்கைகளால் எங்கள் இருதயம் அதிசயப்பட்டு பூரிக்கும் என்பதை விசுவாசித்து ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே....ஆமென்.
ஜெப தேவைகளுக்கும் ஆலோசனைகளுக்கும்
24/7 - 9967228488
WhatsApp 74004 72200
Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India
NMPF - Mumbai India.