24/06/2026
நமக்கு 50 வயதை கடந்து அறுபதை நோக்கி செல்லும்போது நமது எண்ண ஓட்டங்கள் நமக்கு எப்படி இருக்கும் தெரியுமா?.. நிச்சயம் அந்த வயதில் நாம் இதை உணர்ந்து கொண்டுதான் போயாக வேண்டிய வரும்.. இப்போதே உணர்ந்து கொண்டால் நாளைய வாழ்வு சிறப்பாக அமையும்..
1. அதுவரை நாம் நமது பெற்றோர்கள், நமது உடன் பிறந்தவர்கள், நமது மனைவி, நமது குழந்தைகள், நமது தோழர்களை நேசித்திருப்போம்.. ஆனால் இந்த வயதில் தான் நம்மை நேசிக்க தொடங்குவோம்..
2. தெருவோரங்களில் காய்கறி விற்பவர்களிடமும் பழங்கள் விற்பவரிடமும் பேரம் பேசுவதை நிறுத்தி விடுவோம்.. முடிந்தால் ஐந்தோ, பத்தோ, சேத்தி கொடுத்துவிட்டு வருவோம்..
3. உணவகங்களில் சாப்பிட்டால் அவர்களுக்கு கேட்காமலேயே டிப்ஸ் தருகிறேன்.. வாழ்க்கையில் அன்றாடம் நடத்தும் போராட்டத்தில் என்னைவிட அதிகமாக போராடும் சர்வரின் முகம் மலருவதில் ஒரு சிறு ஆனந்தம் எனக்கு..
4. சில நேரங்களில் பிறர் சொல்லுவது தவறு என்று தெரிந்தாலும் அவர்களை திருத்தாமல் இருக்க கற்றுக் கொண்டேன் எல்லோரையும் திருத்தும் பொறுப்பு இப்போது என்னுடையது அல்ல.. எல்லோரும் சரியாக இருக்க வேண்டும் என்று நினைப்பது பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருட்டானது என்பது போல்தான் என்பதை புரிந்துகொன்டேன்..
5. பெருந்தன்மையுடன் தாராளமாக மற்றவரை பாராட்டுகிறேன்.. இது பாராட்டு பெறுபவருக்கு மட்டுமல்ல, என்னுடைய மனதுக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு சின்ன ஆலோசனையை சொல்கிறேனே, ஒருவர் உங்களை பாராட்டும் போது ஒருபோதும் மறுக்காதீர்கள், நன்றி சொல்லி முழுமையாக ஏற்றுக்கொள்ளுங்கள்..
6. நமது ஆடைகளில் யாரோ, ஒருவர் மூலமாக கரை பட்டுவிட்டால் அலட்டிக்கொள்வதுமில்லை கோபப்படுவதும் இல்லை..
7. நமது மதிப்பை உணராதவர்களிடம் இருந்து விலகிப் போகிறேன். அவர்கள் என் மதிப்பை அறியாமல் இருக்கலாம் என்பதை உணர்ந்து கொள்கிறேன்..
8. யாராவது பொருளாதாரத்தில் என்னை முந்த வேண்டும் என்று எண்ணிக்கொண்டு மோசமாக செயல்பட்டாலும் நான் நிதானமாகவே இருக்கிறேன். நான் பந்தயத்திலே இல்லை என் வாழ்க்கையில் வாழ்கிறேன் என்பதை உணர்ந்து கொண்டேன்..
9. என் உணர்வுகளை எண்ணி சங்கடப்படாமல் இருக்க கற்றுக்கொள்கிறேன். என்னை மனிதனாக்குபவை என் உணர்வுகள் மட்டும்தான் என்பதை உணர்ந்து கொண்டேன்..
10. ஒரு உறவை முறித்துக்கொள்வதைவிட என் ஈகோவை முறித்துக்கொள்வது நல்லது என்பதை உணர்ந்து கொள்ள இத்தனை ஆண்டுகள் ஆயிற்று.. எனது ஈகோ என்னை தனிமைப்படுத்தும், உறவுகளால் நான் தனிமைப்பட்டு போக விரும்பவில்லை..
11. ஒவ்வொரு நாளையும் என்இறுதி நாள் போல் வாழ கற்றுக்கொண்டிருந்தேன். ஏன் இது கூட எனக்கு கடைசி நாளாக இருக்கலாம் என்பதை என் மனது சொல்லிக் கொண்டிருக்கிறது..
12. என்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பதை மட்டுமே செய்து கொண்டிருக்கிறேன், என்னுடைய சந்தோஷத்திற்கு நான் மட்டும்தான் பொறுப்பு, மகிழ்ச்சி என்பது ஒருதேர்வு அதை தேர்ந்தெடுத்து சரியான முறையில் கையாண்டால் எந்த நேரத்திலும் நாம் மகிழ்ச்சியாக இருக்கலாம்..
13. எனது தேவைகளை குறைத்துக்கொண்டேன் அதனால் எனக்கு கடன் எதுவும் வேண்டாம் என்பதை புரிந்து கொண்டேன்..
14. மொத்தத்தில் நான் இதுவரை வாழ்ந்த வாழ்க்கை பணத்தை நோக்கி மட்டும்தான் என்பதையும், அது பயனற்ற வாழ்க்கை என்பதையும் தெளிவாக தெரிந்து கொண்டேன்.. எனது அறுபதாவது வயதில்..
15. எனக்கு மட்டும் நான் நல்லவன் என்பதை தெரிந்து கொண்டால் போதும் அதை மற்றவர்களிடம் நிரூபிக்க நினைத்தால் நான் பல தவறுகளை செய்ய வேண்டியவரும் என்பதை தெளிவாக தெரிந்து கொண்டேன்..
16. ஒவ்வொருவரும் கடைசி காலத்தில் திருந்தி என்ன பயன், வெகுதூரம் வாழ்க்கை பயணத்தை கடந்து வந்த பிறகு உணர்ந்து எனக்கு என்ன பயன் என்பதையும் நான் புரிந்து கொண்டு வருந்திய காலமும் உண்டு..