PortoNovo Payaniyar Nala Sangam - பரங்கிப்பேட்டை பயணியர் நலச்சங்கம்

  • Home
  • India
  • Chidambaram
  • PortoNovo Payaniyar Nala Sangam - பரங்கிப்பேட்டை பயணியர் நலச்சங்கம்

PortoNovo Payaniyar Nala Sangam - பரங்கிப்பேட்டை பயணியர் நலச்சங்கம் PortoNovO Payaniyar Nala Sangam (PNO-PNS) is started to highlight the demands, needs, concerns etc. from Passengers (Rail, Road & River) of Parangipettai
(2)

25/05/2026

அப்படி என்ன அவசரம்?

சிதம்பரம் - கடலூர் வழித்தடத்தில் இயக்க கூடிய தனியார் பேருந்துகள் புவனகிரி வட்டம், ஆதிவராகநல்லூரில் பேருந்து நிறுத்தத்தில் அராஜகம்

25/05/2036 இன்று மாலை 2.58 மணியளவில் சிதம்பரத்தில் இருந்து கடலூர் சென்ற VKMS வண்டி எண் TN 49 BL 3585 ஆதிவராகநல்லூர் பேருந்து நிறுத்தத்தில் அதிவேகமாக வந்து, இருக்க கூடிய பேரிகார்டை இடித்து விட்டு நிற்காமல் பேருந்து ஓட்டுநர் சென்றார்.

அருகாமையில் இருக்க கூடிய இரண்டு பேர் மேல் பரந்து விழுந்ததில் இருவருக்கு லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

தகவல்: சுபாஷ்

- பரங்கிப்பேட்டை பயணியர் நலச்சங்கம் (PNO-PNS)

District Collector Cuddalore Chief Minister of Tamil Nadu K.A Sengottaiyan Thol.Thirumavalavan மு.தமிமுன் அன்சாரி TVK Actor Vijay CMOTamilNadu கலீல் பாகவீ

பரங்கிப்பேட்டையில் தெருநாய்கள் தொல்லை: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக் கோரி பேரூராட்சியில் பரங்கிப்பேட்டை பயணி...
25/05/2026

பரங்கிப்பேட்டையில் தெருநாய்கள் தொல்லை: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக் கோரி பேரூராட்சியில் பரங்கிப்பேட்டை பயணியர் நலச்சங்கம் மனு!

பரங்கிப்பேட்டை பகுதியில் சாலைகளில் அதிக அளவில் சுற்றித் திரியும் தெருநாய்களால் பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால், நீதிமன்றத் தீர்ப்பின்படி அவற்றை அப்புறப்படுத்தக் கோரி பேரூராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் பரங்கிப்பேட்டை பயணியர் நலச்சங்கம் இன்று கோரிக்கை மனுவை வழங்கியது.

பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளிலும் கடந்த சில காலமாக தெருநாய்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் சாலையில் அச்சமின்றி நடக்க முடியாத சூழல் நிலவுகிறது. குறிப்பாக, சிறு வயது பிள்ளைகள், பெண்கள் மற்றும் வயதானவர்கள் தினசரி பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

துரத்தி கடிக்கும் நாய்கள்:

பகலில் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் நாய்களின் தொல்லையால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சுகின்றனர். சாலையில் நடந்து செல்பவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் கூட்டமாக வரும் நாய்கள் துரத்தித் துரத்திக் கடிக்க முற்படுவதால் அடிக்கடி விபத்துகளும், பொதுமக்களுக்குப் பாதிப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

https://www.facebook.com/share/p/1DubXNRaMg/

நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தக் கோரிக்கை:

இதுகுறித்து இன்று (திங்கட்கிழமை) காலை 11.30 மணி அளவில், பரங்கிப்பேட்டை பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் திருமதி ப்ரீத்தி அவர்களிடம் பொதுமக்கள் சார்பில் பரங்கிப்பேட்டை பயனியர் நலச்சங்கத் தலைவர் முனைவர் கோ. அருள்முருகன் கோரிக்கை மனுவை வழங்கினார்.

அந்த மனுவில், "தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை அப்புறப்படுத்தும் வகையில் கருணைக்கொலை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளலாம் என உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு உள்ளது. எனவே, இந்த நீதிமன்றத் தீர்ப்பை உடனடியாக நடைமுறைப்படுத்தி, பொதுமக்கள் அச்சமின்றி வெளியே சென்று வர பேரூராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இன்று பரங்கிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் 5வது வார்டு கவுன்சிலர் ஜாபர் ஷரிப், சமூக ஆர்வலர்கள் ஆதம் மாலிக், அலி கான் மற்றும் மீரா உசேன் உள்ளிட்டோர் நேரில் வருகை தந்து மனுவை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

- பரங்கிப்பேட்டை பயணியர் நலச்சங்கம் (PNO-PNS)

District Collector Cuddalore Chief Minister of Tamil Nadu மு.தமிமுன் அன்சாரி CMOTamilNadu Thol.Thirumavalavan TVK K.A Sengottaiyan Actor Vijay கலீல் பாகவீ


​ #பரங்கிப்பேட்டை

​ #கடலூர்_மாவட்டம்
​ ​

​ #தெருநாய்கள்தொல்லை


​ ​



​ #போர்க்காலநடவடிக்கை

பரங்கிப்பேட்டை மற்றும் சுற்று வட்டார மக்களுக்கோர் நற்செய்தி...! காரைக்கால் சென்று வர காலையில் ஒரு இணைப்பு ரயில்...பரங்கி...
24/05/2026

பரங்கிப்பேட்டை மற்றும் சுற்று வட்டார மக்களுக்கோர் நற்செய்தி...!

காரைக்கால் சென்று வர காலையில் ஒரு இணைப்பு ரயில்...

பரங்கிப்பேட்டையிலிருந்து காரைக்கால் செல்ல மாலை 6:10 மணிக்கு பெங்களூர் - காரைக்கால், காரைக்காலில் இருந்து பரங்கிப்பேட்டை வருவதற்கு காலை 4:50 மணிக்கு காரைக்கால் - பெங்களூர் விரைவு ரயில்கள் நாகூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் நன்னிலம் ஆகிய வழிகளில் இயக்கப்படுகின்றன. இதற்கான பயணக் கட்டணம் 60 ரூபாய்.

தற்போது, காலை 7:29 மணிக்கு பரங்கிப்பேட்டையிலிருந்து மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரயிலில் சென்றால், அங்கிருந்து திருநள்ளாறு வழியாக காரைக்கால் வரை இயக்கப்படும் பயணிகள் ரயிலின் இணைப்பு கிடைக்கின்றது. இதற்கான பயணக் கட்டணம் 30 ரூபாய் மட்டுமே.

அதே ரயில் மீண்டும் நண்பகல் 12:45 மணிக்கு காரைக்காலிலிருந்து புறப்பட்டு மயிலாடுதுறைக்கு வருகின்றது. மயிலாடுதுறையிலிருந்து 3:45 மணிக்கு பரங்கிப்பேட்டை வழியாக விழுப்புரம் மற்றும் காட்பாடி செல்லும் ரயிலுக்கு இதன் மூலம் இணைப்பு கிடைக்கின்றது. இதற்கான பயணக் கட்டணம் 40 ரூபாய் மட்டுமே.

இணைப்பு ரயில்களுக்கான முழுமையான கால அட்டவணை அனைத்து வழித்தடங்களுடன் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

https://www.facebook.com/share/p/1B6ftFRkxR/

குறைவான கட்டணத்தில் நிறைவான பயணத்தை மேற்கொண்டு பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தின் வருமானத்தை உயர்த்த உதவிடுக...

அனைவரும் இதை பயன்படுத்துவதுடன் அனைவருக்கும் அனுப்பி வைக்கவும்.

- பரங்கிப்பேட்டை பயணியர் நலச்சங்கம் (PNO-PNS)

பரங்கிப்பேட்டை வாரச்சந்தை (21.05.2026)படங்கள்: முஹம்மது அலி கான்- பரங்கிப்பேட்டை பயணியர் நலச்சங்கம் (PNO-PNS)
22/05/2026

பரங்கிப்பேட்டை வாரச்சந்தை (21.05.2026)

படங்கள்: முஹம்மது அலி கான்

- பரங்கிப்பேட்டை பயணியர் நலச்சங்கம் (PNO-PNS)

4 ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட ஆய்வு தொகுப்பு...தோண்ட தோண்ட கிளம்பும் பூதம்; அலட்சியத்தால் இழந்த அத்தியாவசிய உரிமைகள்...
21/05/2026

4 ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட ஆய்வு தொகுப்பு...

தோண்ட தோண்ட கிளம்பும் பூதம்; அலட்சியத்தால் இழந்த அத்தியாவசிய உரிமைகள்

https://www.facebook.com/223893774301951/posts/5489849761039633/

பரங்கிப்பேட்டை ஓர் வரலாற்று சிறப்புமிக்க நகரம் என்பதுடன் பல்வேறு வசதி வாய்ப்புகள் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு பேரூர். காலப்போக்கில் மக்களின் அலட்சியத்தாலும், பரங்கிப்பேட்டை நிர்வாகத்தினரின் கண்டுகொள்ளாமையாலும் பல்வேறு வசதிகள் தொடர்ந்து பரங்கிப்பேட்டையை விட்டு சென்று விட்டன. இப்போதும் சென்று கொண்டிருக்கின்றன.

அதில் மக்களின் பயன்பாட்டிற்கு பெரிதும் உதவியா இருக்கக்கூடிய தொடர்வண்டி சேவைகளும், பேருந்து சேவைகளும் உள்ளடக்கிய பொதுப் போக்குவரத்துகள். இவ்வளவு பெரிய நகரத்திற்கு ஏன் போதுமான போக்குவரத்து சேவைகள் இல்லை என்பதை ஆய்வு செய்தபோது பல்வேறு தகவல்கள் கிடைத்தன. கடந்த சில ஆண்டுகளாக மீண்டும் அந்த சேவைகள் பரங்கிப்பேட்டைக்கு வரவேண்டும் என்பதற்காக வேண்டி பல்வேறு தகவல்களை திரட்டித் தந்து கொண்டிருக்கின்றது MYPNO.

அந்த அடிப்படையில் சமீபத்தில் கிடைத்த ஓர் அதிர்ச்சிகரமான, ஆச்சரியமான தகவல் என்னவென்றால், 1985ஆம் ஆண்டில் பரங்கிப்பேட்டைக்கு என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகளால் தொலைதூர நகரங்களில் இருந்து எட்டு பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. அதுகுறித்த தகவல்களை விவரிக்கின்றது இந்த செய்தித் தொகுப்பு.

மாநிலங்களுக்கு இடையேயான வழித்தடங்களில் போக்குவரத்து வாகனங்களை இயக்குவதைக் கட்டுப்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும், மோட்டார் வாகனச் சட்டம் 1988ன் பிரிவு 88(5) மற்றும் 88(6)ன் கீழ் கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி ஆகிய அண்டை மாநிலங்களுடன் தமிழ்நாடு அரசு மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து ஒப்பந்தம் (Interstate Transport Agreement) செய்துள்ளது.

அந்த வகையில், மாநிலங்களுக்கிடையேயான வழித்தடங்களில் திறமையான, போதிய, சிக்கனமான மற்றும் முறையாக ஒருங்கிணைக்கப்பட்ட சாலைப் போக்குவரத்துச் சேவையை அளிக்கும் நோக்கத்திற்காக 1939ம் ஆண்டு மோட்டார் வாகனங்கள் சட்டத்தின் (மையச் சட்டம் எண் 4/1939), 63ம் பிரிவின் கீழ் தமிழ்நாடு மாநிலம் மற்றும் புதுச்சேரி ஒன்றியத்து ஆட்சிப்பரப்புக்கிடையில் பரிமாற்ற உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது நலச் (போக்குவரத்து) செயலகத்தின் 09.03.1985ந் தேதியிட்ட அரசாணை பல்வகை எண் 3/85ல் பிறப்பிக்கப்பட்டு, 19.04.1985ந் தேதியிட்ட புதுச்சேரி அரசிதழ் (பகுதி-1 சிறப்பிதழ்) எண் 40ல் வெளியிடப்பட்டுள்ளது (https://transport.py.gov.in/sites/default/files/PDYTNAG.pdf).

அ. பரங்கிப்பேட்டைக்கு அனுமதிக்கப்பட்ட பேருந்துகளை இயக்க வேண்டும்

தமிழ்நாடு அரசு மற்றும் புதுச்சேரி ஒன்றியத்து ஆட்சிப்பரப்பு ஆகிய இரண்டுக்குமான ஒற்றை முனை வரி மற்றும் இரட்டை முனை வரி அடிப்படையில் மாநிலங்களுக்கிடையேயான உடன்படிக்கையில் சேர்த்துக் கொள்வதற்கு இரண்டு தரப்பினராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட வழித்தடங்களில் கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டைக்கு அனுமதிக்கப்பட்ட பேருந்துகள்:

1. தமிழ்நாடு அரசுக்கு ஒதுக்கப்பட்ட வழித்தடங்கள் மற்றும் பேருந்துகளின் எண்ணிக்கை (பின்னிணைப்பு I - பகுதி A)

1.1 வ. எண். 6 - சிதம்பரம் முதல் திண்டிவனம் வரை (வழி) பரங்கிப்பேட்டை, கடலூர், புதுச்சேரி மற்றும் கிளியனூர் - 2 பேருந்துகள் - 4 இருவழிப் பயணங்கள்
1.1.1 மேலும், சிதம்பரம் முதல் கடலூர் வரை - 4 சிற்றிடைப் பயணங்கள்

1.2 வ. எண். 32 - புதுச்சேரி முதல் காரைக்கால் வரை (வழி) கடலூர், பரங்கிப்பேட்டை, சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கொள்ளுமாங்குடி மற்றும் நெடுங்காடு - 1 பேருந்து - 2 இருவழிப் பயணங்கள்

1.3 வ. எண். 34 - சிதம்பரம் முதல் புதுச்சேரி வரை (வழி) கடலூர் மற்றும் பரங்கிப்பேட்டை - 1 பேருந்து - 6 இருவழிப் பயணங்கள்

1.4 வ. எண். 41 - சிதம்பரம் முதல் புதுச்சேரி வரை (வழி) புவனகிரி, பரங்கிப்பேட்டை மற்றும் கடலூர் - 1 பேருந்து - 4 இருவழிப் பயணங்கள்
1.4.1 மேலும், சிதம்பரம் முதல் கடலூர் வரை – 2 சிற்றிடைப் பயணங்கள்

2. தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட வழித்தடங்கள் மற்றும் பேருந்துகளின் எண்ணிக்கை (பின்னிணைப்பு I - பகுதி B)

2.1 வ. எண். 50 - நாகப்பட்டினம் முதல் புதுச்சேரி வரை (வழி) கடலூர், பரங்கிப்பேட்டை, சீர்காழி, மயிலாடுதுறை, கொள்ளுமாங்குடி மற்றும் காரைக்கால் - 1 பேருந்து - 2 இருவழிப் பயணங்கள்

3. புதுச்சேரி அரசுக்கு ஒதுக்கப்பட்ட வழித்தடங்கள் மற்றும் பேருந்துகளின் எண்ணிக்கை (பின்னிணைப்பு II - பகுதி A)

3.1 வ. எண். 53 - காட்டுமன்னார்குடி முதல் புதுச்சேரி வரை (வழி) சிதம்பரம், புவனகிரி, பரங்கிப்பேட்டை மற்றும் கடலூர் - 1 பேருந்து - 4 இருவழிப் பயணங்கள்

3.2 வ. எண். 70 - புதுச்சேரி முதல் காரைக்கால் வரை (வழி) கடலூர், பரங்கிப்பேட்டை, சிதம்பரம், மயிலாடுதுறை, கொள்ளுமாங்குடி மற்றும் நெடுங்காடு - 1 பேருந்து - 2 இருவழிப் பயணங்கள்

மேற்கண்ட தகவல்களின் அடிப்படையில் பரங்கிப்பேட்டைக்கு 8 பேருந்துகளும், 24 இருவழிப் பயணங்கள் மற்றும் 6 சிற்றிடைப் பயணங்கள் என மொத்தம் 30 பயணங்களும் இயக்குவதற்கு உடன்படிக்கையில் இரண்டு தரப்பினராலும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன.

ஆனால், பிற அனைத்து வழித்தடங்களிலும் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் இவற்றில் ஒன்றுகூட இதுநாள் வரை பரங்கிப்பேட்டை வழியாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகள் சார்பாக இயக்கப்படவில்லை என்பதுதான் மிகப்பெரும் வேதனையான தகவல்.

ஆகவே, பரங்கிப்பேட்டை மற்றும் சுற்று வட்டார பொதுமக்களின் நலனை கருதி தமிழ்நாடு அரசு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கிடையேயான உடன்படிக்கையில் இரண்டு தரப்பினராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட வழித்தடங்களில் பரங்கிப்பேட்டைக்கு அனுமதிக்கப்பட்ட மேற்கண்ட 8 பேருந்துகளையும் உடனடியாக இயக்க வேண்டும் என பரங்கிப்பேட்டை மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் சார்பாக கேட்டுக் கொள்கின்றோம்.

தொகுப்பு : கலீல் பாகவீ, MYPNO முதன்மை ஆசிரியர்

District Collector Cuddalore
CMOTamilNadu Thol.Thirumavalavan MRK.Panneerselvam K A Pandian M L A Udhayanidhi Stalin DMK ITWing Arasubus Sun TV fans S. S. Sivasankar

#தமிழ்நாடு #பரங்கிப்பேட்டை #புதுச்சேரி #பேருந்து

Address

Bus Stand, Parangipettai
Chidambaram
608502

Website

Alerts

Be the first to know and let us send you an email when PortoNovo Payaniyar Nala Sangam - பரங்கிப்பேட்டை பயணியர் நலச்சங்கம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PortoNovo Payaniyar Nala Sangam - பரங்கிப்பேட்டை பயணியர் நலச்சங்கம்:

Share