21/05/2026
4 ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட ஆய்வு தொகுப்பு...
தோண்ட தோண்ட கிளம்பும் பூதம்; அலட்சியத்தால் இழந்த அத்தியாவசிய உரிமைகள்
https://www.facebook.com/223893774301951/posts/5489849761039633/
பரங்கிப்பேட்டை ஓர் வரலாற்று சிறப்புமிக்க நகரம் என்பதுடன் பல்வேறு வசதி வாய்ப்புகள் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு பேரூர். காலப்போக்கில் மக்களின் அலட்சியத்தாலும், பரங்கிப்பேட்டை நிர்வாகத்தினரின் கண்டுகொள்ளாமையாலும் பல்வேறு வசதிகள் தொடர்ந்து பரங்கிப்பேட்டையை விட்டு சென்று விட்டன. இப்போதும் சென்று கொண்டிருக்கின்றன.
அதில் மக்களின் பயன்பாட்டிற்கு பெரிதும் உதவியா இருக்கக்கூடிய தொடர்வண்டி சேவைகளும், பேருந்து சேவைகளும் உள்ளடக்கிய பொதுப் போக்குவரத்துகள். இவ்வளவு பெரிய நகரத்திற்கு ஏன் போதுமான போக்குவரத்து சேவைகள் இல்லை என்பதை ஆய்வு செய்தபோது பல்வேறு தகவல்கள் கிடைத்தன. கடந்த சில ஆண்டுகளாக மீண்டும் அந்த சேவைகள் பரங்கிப்பேட்டைக்கு வரவேண்டும் என்பதற்காக வேண்டி பல்வேறு தகவல்களை திரட்டித் தந்து கொண்டிருக்கின்றது MYPNO.
அந்த அடிப்படையில் சமீபத்தில் கிடைத்த ஓர் அதிர்ச்சிகரமான, ஆச்சரியமான தகவல் என்னவென்றால், 1985ஆம் ஆண்டில் பரங்கிப்பேட்டைக்கு என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகளால் தொலைதூர நகரங்களில் இருந்து எட்டு பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. அதுகுறித்த தகவல்களை விவரிக்கின்றது இந்த செய்தித் தொகுப்பு.
மாநிலங்களுக்கு இடையேயான வழித்தடங்களில் போக்குவரத்து வாகனங்களை இயக்குவதைக் கட்டுப்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும், மோட்டார் வாகனச் சட்டம் 1988ன் பிரிவு 88(5) மற்றும் 88(6)ன் கீழ் கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி ஆகிய அண்டை மாநிலங்களுடன் தமிழ்நாடு அரசு மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து ஒப்பந்தம் (Interstate Transport Agreement) செய்துள்ளது.
அந்த வகையில், மாநிலங்களுக்கிடையேயான வழித்தடங்களில் திறமையான, போதிய, சிக்கனமான மற்றும் முறையாக ஒருங்கிணைக்கப்பட்ட சாலைப் போக்குவரத்துச் சேவையை அளிக்கும் நோக்கத்திற்காக 1939ம் ஆண்டு மோட்டார் வாகனங்கள் சட்டத்தின் (மையச் சட்டம் எண் 4/1939), 63ம் பிரிவின் கீழ் தமிழ்நாடு மாநிலம் மற்றும் புதுச்சேரி ஒன்றியத்து ஆட்சிப்பரப்புக்கிடையில் பரிமாற்ற உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது நலச் (போக்குவரத்து) செயலகத்தின் 09.03.1985ந் தேதியிட்ட அரசாணை பல்வகை எண் 3/85ல் பிறப்பிக்கப்பட்டு, 19.04.1985ந் தேதியிட்ட புதுச்சேரி அரசிதழ் (பகுதி-1 சிறப்பிதழ்) எண் 40ல் வெளியிடப்பட்டுள்ளது (https://transport.py.gov.in/sites/default/files/PDYTNAG.pdf).
அ. பரங்கிப்பேட்டைக்கு அனுமதிக்கப்பட்ட பேருந்துகளை இயக்க வேண்டும்
தமிழ்நாடு அரசு மற்றும் புதுச்சேரி ஒன்றியத்து ஆட்சிப்பரப்பு ஆகிய இரண்டுக்குமான ஒற்றை முனை வரி மற்றும் இரட்டை முனை வரி அடிப்படையில் மாநிலங்களுக்கிடையேயான உடன்படிக்கையில் சேர்த்துக் கொள்வதற்கு இரண்டு தரப்பினராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட வழித்தடங்களில் கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டைக்கு அனுமதிக்கப்பட்ட பேருந்துகள்:
1. தமிழ்நாடு அரசுக்கு ஒதுக்கப்பட்ட வழித்தடங்கள் மற்றும் பேருந்துகளின் எண்ணிக்கை (பின்னிணைப்பு I - பகுதி A)
1.1 வ. எண். 6 - சிதம்பரம் முதல் திண்டிவனம் வரை (வழி) பரங்கிப்பேட்டை, கடலூர், புதுச்சேரி மற்றும் கிளியனூர் - 2 பேருந்துகள் - 4 இருவழிப் பயணங்கள்
1.1.1 மேலும், சிதம்பரம் முதல் கடலூர் வரை - 4 சிற்றிடைப் பயணங்கள்
1.2 வ. எண். 32 - புதுச்சேரி முதல் காரைக்கால் வரை (வழி) கடலூர், பரங்கிப்பேட்டை, சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கொள்ளுமாங்குடி மற்றும் நெடுங்காடு - 1 பேருந்து - 2 இருவழிப் பயணங்கள்
1.3 வ. எண். 34 - சிதம்பரம் முதல் புதுச்சேரி வரை (வழி) கடலூர் மற்றும் பரங்கிப்பேட்டை - 1 பேருந்து - 6 இருவழிப் பயணங்கள்
1.4 வ. எண். 41 - சிதம்பரம் முதல் புதுச்சேரி வரை (வழி) புவனகிரி, பரங்கிப்பேட்டை மற்றும் கடலூர் - 1 பேருந்து - 4 இருவழிப் பயணங்கள்
1.4.1 மேலும், சிதம்பரம் முதல் கடலூர் வரை – 2 சிற்றிடைப் பயணங்கள்
2. தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட வழித்தடங்கள் மற்றும் பேருந்துகளின் எண்ணிக்கை (பின்னிணைப்பு I - பகுதி B)
2.1 வ. எண். 50 - நாகப்பட்டினம் முதல் புதுச்சேரி வரை (வழி) கடலூர், பரங்கிப்பேட்டை, சீர்காழி, மயிலாடுதுறை, கொள்ளுமாங்குடி மற்றும் காரைக்கால் - 1 பேருந்து - 2 இருவழிப் பயணங்கள்
3. புதுச்சேரி அரசுக்கு ஒதுக்கப்பட்ட வழித்தடங்கள் மற்றும் பேருந்துகளின் எண்ணிக்கை (பின்னிணைப்பு II - பகுதி A)
3.1 வ. எண். 53 - காட்டுமன்னார்குடி முதல் புதுச்சேரி வரை (வழி) சிதம்பரம், புவனகிரி, பரங்கிப்பேட்டை மற்றும் கடலூர் - 1 பேருந்து - 4 இருவழிப் பயணங்கள்
3.2 வ. எண். 70 - புதுச்சேரி முதல் காரைக்கால் வரை (வழி) கடலூர், பரங்கிப்பேட்டை, சிதம்பரம், மயிலாடுதுறை, கொள்ளுமாங்குடி மற்றும் நெடுங்காடு - 1 பேருந்து - 2 இருவழிப் பயணங்கள்
மேற்கண்ட தகவல்களின் அடிப்படையில் பரங்கிப்பேட்டைக்கு 8 பேருந்துகளும், 24 இருவழிப் பயணங்கள் மற்றும் 6 சிற்றிடைப் பயணங்கள் என மொத்தம் 30 பயணங்களும் இயக்குவதற்கு உடன்படிக்கையில் இரண்டு தரப்பினராலும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன.
ஆனால், பிற அனைத்து வழித்தடங்களிலும் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் இவற்றில் ஒன்றுகூட இதுநாள் வரை பரங்கிப்பேட்டை வழியாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகள் சார்பாக இயக்கப்படவில்லை என்பதுதான் மிகப்பெரும் வேதனையான தகவல்.
ஆகவே, பரங்கிப்பேட்டை மற்றும் சுற்று வட்டார பொதுமக்களின் நலனை கருதி தமிழ்நாடு அரசு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கிடையேயான உடன்படிக்கையில் இரண்டு தரப்பினராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட வழித்தடங்களில் பரங்கிப்பேட்டைக்கு அனுமதிக்கப்பட்ட மேற்கண்ட 8 பேருந்துகளையும் உடனடியாக இயக்க வேண்டும் என பரங்கிப்பேட்டை மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் சார்பாக கேட்டுக் கொள்கின்றோம்.
தொகுப்பு : கலீல் பாகவீ, MYPNO முதன்மை ஆசிரியர்
District Collector Cuddalore
CMOTamilNadu Thol.Thirumavalavan MRK.Panneerselvam K A Pandian M L A Udhayanidhi Stalin DMK ITWing Arasubus Sun TV fans S. S. Sivasankar
#தமிழ்நாடு #பரங்கிப்பேட்டை #புதுச்சேரி #பேருந்து