தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்

  • Home
  • India
  • Chennai
  • தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் service oriented business milk. so milk dealers welfare onely "தங்கம் செய்யாததை சங்கம் செய்யும்."

சேவை சார்ந்த தொழிலான பால் விநியோகம், உற்பத்தியில் ஈடுபட்டு வரும் பால் முகவர்கள், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால்வளத்துறை சார்ந்த தொழிலாளர்களின் நலன், வாழ்வாதாரத்திதற்காக போராடும் அமைப்பு தான் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.

20/12/2025

*விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.*

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் தொடங்கப்பட்டு, வரும் 2026 ஜனவரி மாதம் முதல் செயல்பாட்டிற்கு வர இருக்கும் *கூட்டு உறவு பால் நிறுவனத்தின் (TNMDEWA DAPPL) தலைமை* (சென்னை, கொளத்தூர்) *அலுவலகத்தில் பணியாற்ற* Taly, Excel மற்றும் *CRM* ல் அனுபவம் உள்ள *கணக்காளர் (Accountant),* காசாளர் (Cashier), அலுவலக பொறுப்பாளர் (Office Incharge) மற்றும் *பால் விநியோக பொறுப்பாளர் (Despatch Incharge)* பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேற்கண்ட பொறுப்பிடங்களுக்கு விண்ணப்பம் செய்வோர் தங்களின் விண்ணப்பத்துடன் தங்களைப் பற்றிய சுயவிபரக்குறிப்பு (Resume) மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய *மின்னஞ்சல் முகவரி [email protected]*

*பின் குறிப்பு :-* கணக்காளர் (Accountant) பொறுப்பிற்கு தேர்வு செய்யப்படுபவர் ஜனவரி முதல் வாரத்தில் பணியில் சேர வேண்டும்.

*ஆ.பொன்னுசாமி*
தலைவர் & நிர்வாக இயக்குநர்
*TNMDEWA Dairy and Agro Products Private Limited.*
அலைபேசி :- 9600131725
கட்செவி அஞ்சல் (WhatsApp) :- 095661 21277

*"பால் முகவர்களால் பால் முகவர்களுக்காக உருவாக்கப்பட்ட கூட்டுறவு பால் நிறுவனம்."* "பால் முகவர்களே கூட்டுறவு பால் நிறுவனத்...
17/12/2025

*"பால் முகவர்களால் பால் முகவர்களுக்காக உருவாக்கப்பட்ட கூட்டுறவு பால் நிறுவனம்."* "பால் முகவர்களே கூட்டுறவு பால் நிறுவனத்தின் உரிமையாளர்கள்."
-வாய்ப்பு வழங்க *நாங்க ரெடி..!,* பயன்படுத்திக் கொள்ள *நீங்க ரெடியா..?*

அன்பிற்கினிய பால் முகவர்களுக்கு வணக்கம்.

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் இந்திய அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு MCA எனப்படும் Ministery of Corporate Affairs ல் முறையாக பதிவு செய்து, தொடங்கப்பட்டுள்ள, விரைவில் செயல்பாட்டிற்கு வர இருக்கும் நமது பால் முகவர்களின் கூட்டு உறவு பால் நிறுவனமானது *பங்குதாரர் நிறுவனம் (Partnership Company) இல்லை* என்பதை பால் முகவர்கள் அனைவருக்கும் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.

ஏனெனில் இந்த கூட்டு உறவு பால் நிறுவனமானது இந்திய அரசின் நிறுவனங்கள் சட்டம் 2013 பிரிவு 18ன் கீழ் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் பால் முகவர்களை மட்டுமே உரிமையாளர்களாகவும் (Equity Share Holders), நமது சங்க கூட்டுறவு பால் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவராக இணைய விரும்பும் பால் முகவர்களில் (சங்க உறுப்பினர்) ஒருவருக்கு ஒரு பங்கு (Equity Share) மட்டுமே என்கிற அடிப்படையிலும் செயல்படக் கூடிய வகையில் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

நமது கூட்டு உறவு *பால் நிறுவனத்தின் 1பங்குத் தொகை (Equity Share Amount) 50ஆயிரம் ரூபாய் என முடிவு* செய்து அதனை *பால் முகவர்களிடமிருந்து மட்டும் (TNMDEWA Members Only)* முதலீடாக பெற்று, பால் கொள்முதல், உற்பத்தி, விற்பனை பிரிவுகளில் *கூட்டுறவு அடிப்படையில் செயல்பட இருக்கும் பால் முகவர்களின் கூட்டு உறவு நிறுவனமாகும்.*

எனவே *பால் முகவர்களால், பால் முகவர்களுக்காக..!* தொடங்கப்பட்டுள்ள நமது சங்க *கூட்டுறவு பால் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவராக இணைய விருப்பம் உள்ள பால் முகவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்.* *இன்னும் குறைந்த இடங்களே உள்ளது* என்பதால் *முதலில் வரும் பால் முகவர்களுக்கே முன்னுரிமை* அளிக்கப்படும்.

நமது *கூட்டுறவு பால் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்த உத்தரவாதம்.*

*உரிமையாளர்கள்..!*
நமது சங்கத்தின் சார்பில் தொடங்கப்படும் *கூட்டுறவு பால் நிறுவனத்தில் முதலீடு செய்யும் பால் முகவர்கள் அனைவரும்* பங்கு முதலீட்டாளர்களாக (Equity Share Holder) இருந்தாலும் கூட அவர்கள் அனைவரும் இந்த *கூட்டுறவு பால் நிறுவனத்தின் உரிமையாளர்களே.!*

*லாபம் பகிர்வு..!*
ஆண்டுதோறும் நிறுவனத்தின் தணிக்கை செய்யப்பட்ட *நிகர லாபத்தில் இருந்து நமது கூட்டுறவு பால் நிறுவனத்தின் அனைத்து உரிமையாளர்களுக்கும் 30% வருவாய் (Equity Dividend) பிரித்து வழங்கப்படும்.*

*கூடுதல் லாப பகிர்வு..!*
நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக *பால்* மற்றும் *பால் பொருட்கள் வாங்கி விற்பனை செய்யும் (Equity Share Holders) உரிமையாளர்களுக்கு* ஆண்டுதோறும் நிறுவனத்தின் தணிக்கை செய்யப்பட்ட *நிகர லாபத்தில் இருந்து 10% வருவாய் கூடுதல் போனஸாக (Bonus Equity Dividend) பிரித்து வழங்கப்படும்.*

*பொறுப்பு..!*
"நாமே நிறுவனத்தின் உரிமையாளர்கள், நாமே பால் முகவர்கள், நாமே விற்பனை பிரதிநிதிகள்." என்பதால் இந்த கூட்டுறவு பால் நிறுவனத்தின் வளர்ச்சியில் கிடைக்கும் வருமானத்தில் மட்டுமல்ல, பால், தயிர் உள்ளிட்ட பால் பொருட்களை சந்தைப்படுத்துதல், விளம்பரப்படுத்துதல், புதிய, புதிய பால் முகவர்களை அறிமுகம் செய்தல் என *அனைத்து பொறுப்புகளும் உரிமையாளர்களான *பால் முகவர்கள் அனைவருக்கும் சரிசமமாகும்.*

*நிறுவனத்தின் வளர்ச்சிக்கான ஒத்துழைப்பு..!*
நமது கூட்டுறவு பால் நிறுவனத்தின் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்து அதனை செவ்வனே செயல்படுத்த நமது *கூட்டுறவு பால் நிறுவனத்தின் உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டம்* ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் இயக்குநர் குழு தலைமையில் சென்னை கொளத்தூரில் உள்ள நமது கூட்டுறவு பால் நிறுவனத்தின் *தலைமை அலுவலகத்தில் நடைபெறும்.*

இக்கூட்டத்தில் முந்தைய மாதத்தின் பால் கொள்முதல் தொடங்கி, உற்பத்தி, நிறுவனத்தின் பால் பொருட்கள் விற்பனை, அதன்மூலம் கிடைத்த தோராய வருவாய், கடந்த மாதத்தின் செலவுகள் நிறுவனத்திற்கு வரவேண்டிய கடன் தொகை வரை *அனைத்து விபரங்களும் வெளிப்படைத்தன்மையோடு கூட்டுறவு பால் நிறுவனத்தின் உரிமையாளர்கள் அனைவரின் முன் சமர்ப்பிக்கப்படும்.*

*இலக்கு..! பாராட்டு..!! பரிசு..!!!*
அதன்படி நடப்பு மாதம் மற்றும் அடுத்த மாதம் முன்னெடுக்க வேண்டிய இலக்கு குறித்தும், பால் முகவர்கள் நலனை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படும் கூட்டுறவு பால் நிறுவனத்தின் வளர்ச்சி குறித்தும் விரிவாக விவாதித்து *ஒவ்வொரு உரிமையாளர்களுக்கும்* (பங்கு முதலீட்டாளர்கள்) *இலக்கு நிர்ணயம்* செய்யப்படும்.

அவ்வாறு நிர்ணயம் செய்யப்படும் *இலக்கை அடையும் உரிமையாளர்கள்* (பங்கு முதலீட்டாளர்கள்) அடுத்த மாதம் நடைபெறும் உரிமையாளர்கள் (பங்கு முதலீட்டாளர்கள்) கூட்டத்தில் *பாராட்டி, பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்படுவார்கள்.*

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள...

நன்றி

சு.ஆ.பொன்னுசாமி
நிறுவனர் & மாநில தலைவர்
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்
நிர்வாக இயக்குநர், TNMDEWA DAPPL
அலைபேசி :- 9600131725
கட்செவி அஞ்சல் (WhatsApp) :- 9566121277

எஸ்.பொன்மாரியப்பன் 9791072216
பொதுச் செயலாளர், TNMDEWA
இணை நிர்வாக இயக்குநர், TNMDEWA DAPPL

ஆர்.கிரி 9884375333
மாநில ஒருங்கிணைப்பாளர்
இணை நிர்வாக இயக்குநர், TNMDEWA DAPPL

எஸ்.முருகன் 9840009567
மாநில பொருளாளர், TNMDEWA
இயக்குநர், TNMDEWA DAPPL

எஸ்.சுரேஷ்குமார் 7299406066
மாநில ஒருங்கிணைப்பாளர், TNMDEWA
இயக்குநர், TNMDEWA DAPPL

ஜெ.அபுபக்கர் 9884056663
மாநில மக்கள் தொடர்பாளர், TNMDEWA
இயக்குநர், TNMDEWA DAPPL

ஆர்.கே.காண்டீபன் 9444708700
மாநில துணைத் தலைவர், TNMDEWA
இயக்குநர், TNMDEWA DAPPL

எஸ்.எம்.குமார், 8015265500
தலைமை ஒருங்கிணைப்பாளர், TNMDEWA

சொ.ராஜா, 9843412669
மாநில ஒருங்கிணைப்பாளர், TNMDEWA

01/12/2025

*"ஆவின் நெய் விற்பனை விலை உயர்வு, ஜிஎஸ்டி வரி குறைப்பை வைத்து நாடகமாடிய ஆவின் நிர்வாகத்தின் சாயம் வெளுத்தது."*

கடந்த செப்டம்பர் 3ம் தேதி நடைபெற்ற 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், மத்திய அரசு ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கைகளை அறிவித்ததன் அடிப்படையில் UHT பால் மற்றும் பனீர் வகைகளை 5% ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளித்தும், நெய், வெண்ணெய், சீஸ் உள்ளிட்ட பால் பொருட்களுக்கான ஜிஎஸ்டியை 12% லிருந்து 5% ஆகவும், ஐஸ்கிரீம் வகைகளை 18% லிருந்து 5% ஆகவும் ஜிஎஸ்டி குறைப்பு செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வந்தது.

செப்டம்பர் 22முதல் ஜிஎஸ்டி வரி குறைப்பு அமுலுக்கு வந்த உடன் அமுல், நந்தினி, பாண்லே உள்ளிட்ட பல்வேறு மாநில கூட்டுறவு பால் நிறுவனங்கள் மட்டுமின்றி தனியார் பால் நிறுவனங்களும் ஜிஎஸ்டி வரி குறைப்பின் பயனை முழுமையாக பொதுமக்களுக்கு வழங்க கூடிய வகையில் மேற்கண்ட பால் பொருட்களுக்கான விற்பனை விலையை குறைத்து, ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு பிந்தைய முழுமையான புதிய விலைப்பட்டியலையும் வெளியிட்ட நிலையில் தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் மட்டும் ஜிஎஸ்டி வரி குறைப்பின் பயனை பொதுமக்களுக்கு நேரடியாக கிடைக்கும் வகையில் விலை குறைப்பு செய்யாமலும், ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு பிந்தைய முழுமையான புதிய விலைப்பட்டியலை வெளியிடாமலும் அக்டோபர் 30ம் தேதி வரை பண்டிகை கால தள்ளுபடி விலையில் வழங்குவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டது. (19.09.2025 தேதியிட்ட நிர்வாக இயக்குனர் திரு. A.அண்ணாதுரை ஐஏஎஸ் அவர்களின் கடிதம் Ref. No. 3331/N3/Mkg/2025)

ஆவின் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு பொதுமக்களையும் ஜிஎஸ்டி கவுன்சிலையும் ஏமாற்றும் செயல் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் அன்றைய தினமே கடும் கண்டனத்தை பதிவு செய்ததோடு, பண்டிகை காலம் முடிந்த உடன் நெய், பனீர், வெண்ணெய் உள்ளிட்ட பால் பொருட்கள் விற்பனை விலையை ஆவின் நிர்வாகம் மீண்டும் உயர்த்தி விடும் என எச்சரிக்கையும் செய்ததோடு ஜிஎஸ்டி வரி குறைப்பின் பயனை முழுமையாக பொதுமக்களுக்கு வழங்கிட பண்டிகை கால தள்ளுபடி என்பதை விற்பனை விலை குறைப்பு என அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியது.

மத்திய அரசின் GST கவுன்சிலின் வரி சீர்திருத்த முடிவிற்கு கட்டுப்பட்டு, ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு ஏற்ப பால் பொருட்களின் விற்பனை விலையை குறைக்க முன்வரவில்லை என்பதால் இது ஜிஎஸ்டி கவுன்சிலை ஏமாற்றி வரி ஏய்ப்பு செய்யும் முயற்சியாகவும், மத்திய அரசின் நல்லெண்ண நடவடிக்கைகள் மக்களுக்கு செல்வதை தடுக்கும் செயலாகவும் இருக்கிறது எனக் கூறி மத்திய அரசும், ஜிஎஸ்டி கவுன்சிலும் ஆவின் நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த செப்டம்பர் 24ம் தேதி சென்னையில் உள்ள ஜிஎஸ்டி தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் புகார் அளித்திருந்தோம்.

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்ட புகார் மீது ஜிஎஸ்டி கவுன்சில் நடவடிக்கை எடுக்காத சூழலில் ஜிஎஸ்டி வரி குறைப்பின் பயனை முழுமையாக பொதுமக்களுக்கு வழங்காத ஆவின் நிர்வாகம், ஆவின் நெய் விற்பனைக்கு ஏற்கனவே அறிவித்திருந்த பண்டிகை கால தள்ளுபடியை *இன்று முதல் (01.12.2025) நிறுத்தி விட்டு ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு முந்தைய விற்பனை விலையை அமுலுக்கு கொண்டு வந்து நெய் விற்பனைக்கான விலையை லிட்டருக்கு 40.00ரூபாயும், 500மிலிக்கு 20.00ரூபாயும், 5லிட்டருக்கு 350.00ரூபாயும், 15கிலோவிற்கு 1155.00ரூபாயும் உயர்த்தி 28.11.2025தேதியிட்ட (Ref. No. 3331/N3/Mkg./2025) கடிதம்* மூலம் உத்தரவிட்டுள்ள ஆவின் நிர்வாகத்தை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் வன்மையாகக் கண்டிக்கிறது.

ஏற்கனவே ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு பிறகு நெய், பனீர், வெண்ணெய் உள்ளிட்ட பால் பொருட்களுக்கான விற்பனை விலையை நேரடியாக குறைக்காமல் தள்ளுபடி விலை என நாடகமாடி மக்களையும், ஜிஎஸ்டி கவுன்சிலையும் ஏமாற்றிய ஆவின் நிர்வாகம் மீண்டும் ஒரு முறை மக்களை ஏமாற்றி, மக்கள் மீது நிதிச் சுமையை ஏற்றுவது ஏற்றுக் கொள்ள முடியாதது

எனவே ஆவின் நெய்க்கு அமுலில் இருந்த தள்ளுபடி விற்பனை விலையை விலக்கப்பட்டுள்ளதையும், பொதுமக்கள் தலையில் திணிக்கப்பட்டுள்ள விற்பனை விலையை உயர்வையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும், ஜிஎஸ்டி வரி குறைப்பின் பயனை பொதுமக்களுக்கு முழுமையாக, நேரடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசையும், ஆவின் நிர்வாகத்தையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

*இணைப்பு :-*
1) ஆவின் நெய் விலை உயர்வு குறித்த சுற்றறிக்கை
2) நேர்காணல் காணொளி பதிவு.

நன்றி

சு.ஆ.பொன்னுசாமி
நிறுவனர் மாநில தலைவர்
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.
01.12.2025 / காலை 11.25மணி.

01/12/2025

"பால் முகவர்களே கூட்டுறவு பால் நிறுவனத்தின் உரிமையாளர்கள்."
-வாய்ப்பு வழங்க நாங்க ரெடி..!,* பயன்படுத்திக் கொள்ள *நீங்க ரெடியா..?

அன்பிற்கினிய பால் முகவர்களுக்கு வணக்கம்.

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் இந்திய அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு முறையாக பதிவு செய்து, தொடங்கப்பட்டு, விரைவில் செயல்பாட்டிற்கு வர இருக்கும் பால் முகவர்களின் கூட்டுறவு பால் நிறுவனமானது *பங்குதாரர் நிறுவனம் (Partnership Company) இல்லை* என்பதை பால் முகவர்கள் அனைவருக்கும் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.

ஏனெனில் இந்த கூட்டுறவு பால் நிறுவனமானது இந்திய அரசின் நிறுவனங்கள் சட்டம் 2013 பிரிவு 18ன் கீழ் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் பால் முகவர்களை மட்டுமே உரிமையாளர்களாகவும் (Equity Share Holders), நமது சங்க கூட்டுறவு பால் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவராக இணைய விரும்பும் பால் முகவர்களில் (சங்க உறுப்பினர்) ஒருவருக்கு ஒரு பங்கு (Equity Share) மட்டுமே என்கிற அடிப்படையிலும் செயல்படக் கூடிய வகையில் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

நமது கூட்டுறவு *பால் நிறுவனத்தின் 1பங்குத் தொகை (Equity Share Amount) 50ஆயிரம் ரூபாய் என முடிவு* செய்து அதனை *பால் முகவர்களிடமிருந்து மட்டும் (TNMDEWA Members Only)* முதலீடாக பெற்று, பால் கொள்முதல், உற்பத்தி, விற்பனை பிரிவுகளில் *கூட்டுறவு அடிப்படையில் செயல்பட இருக்கும் பால் முகவர்களின் கூட்டு நிறுவனமாகும்.*

அதன்படி முதலில் நமது சங்க உறுப்பினர்களில் *குறைந்தபட்சம் 100பங்கு முதலீட்டாளர்கள் (Equity Share Holders) என்கிற இலக்கு* கொண்டு கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்ட பணிகள் தற்போது செவ்வனே நடைபெற்று வருவதோடு, நமது சங்க கூட்டுறவு பால் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவராக இணைய ஒப்புதல் தெரிவித்து *சென்னையில்* இருந்து *65பேர்,* மற்றும் *வெளி மாவட்டங்களில்* இருந்து *41பேர்* என நமது சங்கத்தின் *106 உறுப்பினர்கள்* தங்களின் பங்குத் தொகையில் 10% தொகையை (5ஆயிரம் ரூபாய்) *குறைந்தபட்ச உத்தரவாத தொகையாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் வங்கி கணக்கில் கடந்த ஜூலை மாதம் வரை செலுத்தியிருந்த நிலையில் கூட்டுறவு பால் நிறுவனத்திற்கான வங்கி கணக்கு தொடங்கப்பட்ட உடன் அதில் சுமார் *62உறுப்பினர்கள் பங்குத் தொகை (Equity Share Amount) 50ஆயிரம் ரூபாயை உடனடியாக செலுத்தி விட்டனர்,* மீதமுள்ள உறுப்பினர்களான பால் முகவர்களும் இன்னும் சில தினங்களில் செலுத்தி விடுவர்.

இந்த நிலையில் நமது சங்க *கூட்டுறவு பால் நிறுவனத்தின் உரிமையாளர்களின் (Equity Share Holders) எண்ணிக்கையை 100ல் இருந்து 200 ஆக உயர்த்துவது என முடிவு* செய்யப்பட்டுள்ளதால் நமது சங்க *கூட்டுறவு பால் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவராக இணைய விருப்பம் உள்ள பால் முகவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்.* மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள நிர்வாகிகளை தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.

நமது *கூட்டுறவு பால் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்த உத்தரவாதம்.*

நமது சங்கத்தின் சார்பில் தொடங்கப்படும் *கூட்டுறவு பால் நிறுவனத்தில் முதலீடு செய்யும் பால் முகவர்கள் அனைவரும்* பங்கு முதலீட்டாளர்களாக (Equity Share Holder) இருந்தாலும் கூட அவர்கள் அனைவரும் இந்த *கூட்டுறவு நிறுவனத்தின் உரிமையாளர்களே.!*

ஆண்டுதோறும் நிறுவனத்தின் தணிக்கை செய்யப்பட்ட *நிகர லாபத்தில் இருந்து நமது கூட்டுறவு பால் நிறுவனத்தின் அனைத்து உரிமையாளர்களுக்கும் 30% வருவாய் (Equity Dividend) பிரித்து வழங்கப்படும்.*

நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக *பால்* மற்றும் *பால் பொருட்கள் வாங்கி விற்பனை செய்யும் உரிமையாளர்களுக்கு* ஆண்டுதோறும் நிறுவனத்தின் தணிக்கை செய்யப்பட்ட *நிகர லாபத்தில் இருந்து 10% வருவாய் கூடுதல் போனஸாக (Bonus Equity Dividend) பிரித்து வழங்கப்படும்.*

இந்த கூட்டுறவு பால் நிறுவனத்தின் வளர்ச்சியில் கிடைக்கும் வருமானத்தில் மட்டுமல்ல, பால், தயிர் உள்ளிட்ட பால் பொருட்களை சந்தைப்படுத்துதல், விளம்பரப்படுத்துதல், புதிய, புதிய பால் முகவர்களை அறிமுகம் செய்தல் என *அனைத்து பொறுப்புகளும் உரிமையாளர்களான *பால் முகவர்கள் அனைவருக்கும் சரிசமமாகும்.*

அதன்படி நமது கூட்டுறவு பால் நிறுவனத்தின் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்து செயல்படுத்த நமது *கூட்டுறவு பால் நிறுவனத்தின் உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டம்* ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் இயக்குநர் குழு தலைமையில் சென்னை கொளத்தூரில் உள்ள நமது கூட்டுறவு பால் நிறுவனத்தின் *தலைமை அலுவலகத்தில் நடைபெறும்.*

இக்கூட்டத்தில் முந்தைய மாதத்தின் பால் கொள்முதல் தொடங்கி, உற்பத்தி, நிறுவனத்தின் பால் பொருட்கள் விற்பனை, அதன்மூலம் கிடைத்த தோராய வருவாய், கடந்த மாதத்தின் செலவுகள் நிறுவனத்திற்கு வரவேண்டிய கடன் தொகை வரை *அனைத்து விபரங்களும் வெளிப்படைத்தன்மையோடு கூட்டுறவு பால் நிறுவனத்தின் உரிமையாளர்கள் அனைவரின் முன் சமர்ப்பிக்கப்படும்.*

அதன்படி நடப்பு மாதம் மற்றும் அடுத்த மாதம் முன்னெடுக்க வேண்டிய இலக்கு குறித்தும், பால் முகவர்கள் நலனை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படும் கூட்டுறவு பால் நிறுவனத்தின் வளர்ச்சி குறித்தும் விரிவாக விவாதித்து *ஒவ்வொரு உரிமையாளர்களுக்கும்* (பங்கு முதலீட்டாளர்கள்) *இலக்கு நிர்ணயம்* செய்யப்படும்.

அவ்வாறு நிர்ணயம் செய்யப்படும் *இலக்கை அடையும் உரிமையாளர்கள்* (பங்கு முதலீட்டாளர்கள்) அடுத்த மாதம் நடைபெறும் உரிமையாளர்கள் (பங்கு முதலீட்டாளர்கள்) கூட்டத்தில் *பாராட்டி, பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்படுவார்கள்.*

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள...

நன்றி

சு.ஆ.பொன்னுசாமி
நிறுவனர் & மாநில தலைவர்
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்
நிர்வாக இயக்குநர், TNMDEWA DAPPL
அலைபேசி :- 9600131725
கட்செவி அஞ்சல் (WhatsApp) :- 9566121277

எஸ்.பொன்மாரியப்பன் 9791072216
பொதுச் செயலாளர், TNMDEWA
இணை நிர்வாக இயக்குநர், TNMDEWA DAPPL

ஆர்.கிரி 9884375333
மாநில ஒருங்கிணைப்பாளர்
இணை நிர்வாக இயக்குநர், TNMDEWA DAPPL

எஸ்.முருகன் 9840009567
மாநில பொருளாளர், TNMDEWA
இயக்குநர், TNMDEWA DAPPL

எஸ்.சுரேஷ்குமார் 7299406066
மாநில ஒருங்கிணைப்பாளர், TNMDEWA
இயக்குநர், TNMDEWA DAPPL

ஜெ.அபுபக்கர் 9884056663
மாநில மக்கள் தொடர்பாளர், TNMDEWA
இயக்குநர், TNMDEWA DAPPL

ஆர்.கே.காண்டீபன் 9444708700
மாநில துணைத் தலைவர், TNMDEWA
இயக்குநர், TNMDEWA DAPPL

"நாங்க ரெடி..!, நீங்க ரெடியா..?"தமிழ்நாடு முழுவதும் பால் விநியோக தொழிலில் ஈடுபட்டு வரும் *பால் முகவர்களின் வாழ்வாதாரத்தை...
28/11/2025

"நாங்க ரெடி..!, நீங்க ரெடியா..?"

தமிழ்நாடு முழுவதும் பால் விநியோக தொழிலில் ஈடுபட்டு வரும் *பால் முகவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடும் உன்னத நோக்கத்தில்* தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் தொடங்கப்பட்டுள்ள கூட்டுறவு *பால் நிறுவனத்தின் (TNMDEWA DAPPL) உரிமையாளர்களில் ஒருவராக* அதிகபட்சம் *200 உறுப்பினர்களுக்கு (பால் முகவர்கள்) மட்டுமே வாய்ப்பு* என்பதால் முதலில் வரும் பால் முகவர்களுக்கு முன்னுரிமை.

*வாய்ப்பு வழங்க நாங்க ரெடி,*

பயன்படுத்தி, *பலனடைய நீங்க ரெடியா..?*

"தேசிய பால் தின விழா - 2025" தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் அன்புடன் அழைக்கிறது.
25/11/2025

"தேசிய பால் தின விழா - 2025" தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் அன்புடன் அழைக்கிறது.

18/11/2025

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் தொடங்கப்பட்டுள்ள *கூட்டுறவு பால் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவராக* முதற்கட்டமாக *100பேருக்கு மட்டுமே வாய்ப்பு* என்பதால் *"முதல் 50"* ல் இணைந்துள்ள பால் முகவர்களுக்கு நன்றி.

பால்வளத்துறையில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கி, வரலாற்று சாதனை படைக்க இருக்கும் இந்த பெரு முயற்சியில் இணைந்துள்ள பால் முகவர்கள் அனைவரையும் மனதார பாராட்டுகிறேன், வாழ்த்தி வரவேற்கிறேன்.

*"இன்றைய விதை நாளைய விருட்சம்"* என்பதால் பால் முகவர்களின் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்த இருக்கும் *இந்த மாபெரும் கூட்டுறவு முயற்சி பால்வளத்துறை வரலாற்றில் நிச்சயமாக பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும்* என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

முதல் 50 நிறைவடைந்துள்ள நிலையில் *அடுத்த 50ல் இணைய முதலில் வரும் பால் முகவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை* அளிக்கப்படும்.

நம்மைப் பற்றி எதிர்மறையான கருத்துக்களை பால் முகவர்கள் மத்தியில் விதைப்போர் விதைத்துக் கொண்டே இருக்கட்டும்.

சேவை சார்ந்த தொழிலான பால் விநியோகத்தில் ஈடுபட்டு வரும் பால் முகவர்களின் நலனிற்கான, வாழ்வாதாரத்திற்கான நேர்மறையான விசயங்களை நாம் விதைத்துக் கொண்டே இருப்போம்.

நேர்மை, உண்மை மீது பலருக்கு நம்பிக்கை ஏற்பட சில காலம் ஆகலாம்.

ஆனால் நம் மீது நம்பிக்கை கொண்டுள்ளோரின் பற்றினை மனதில் கொண்டு நமது வெற்றிப் பயணத்தை தொடர்வோம்.

"முயற்சி செய்தால்
அந்த வானம் கூட
தொட்டு விடும் தூரம் தான்..!" எனும் பொழுது நாம் நமது சங்கத்தின் சார்பில் முன்னெடுத்துள்ள கூட்டுறவு பால் நிறுவனமும் இலக்கை அடையாமலா போய் விடும்..?

*"சுயநலம் மறப்போம்..!, பொதுநலன் காப்போம்...!!, பால்வளம் காக்க பாலமாய் இருப்போம்...!!!"* என்கிற தாரக மந்திரத்தை மனதில் கொண்டு சுமார் 18ஆண்டுகளுக்கும் மேலாக செயலாற்றி வரும் நாம், கொண்ட கொள்கையிலும், ஏற்றுக் கொண்ட பொறுப்பிலும் திடமாய் இருந்து செயல்படுவோம், வெற்றி பெறுவோம்.

நன்றி

சு.ஆ.பொன்னுசாமி
நிறுவனர் மாநில தலைவர்
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.

நிர்வாக இயக்குநர்
TNMDEWA DAPPL
பால் முகவர்களின் கூட்டுறவு பால் நிறுவனம்.
அலைபேசி & கட்செவி அஞ்சல் (WhatsApp) 9600131725 / 9566121277 / 9360331725

15/11/2025

பால்வளத்துறையில் மாபெரும் மாற்றத்தை நிகழ்த்த வரவேற்கிறோம்.

அன்பிற்கினிய பால் முகவர்களுக்கு வணக்கம்.

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் தொடங்கப்பட்டுள்ள *கூட்டுறவு பால் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவராக (Equity Share Holder) இணைந்து பால்வளத்துறையில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்த விருப்பம் உள்ள பால் முகவர்களை அன்புடன் வரவேற்கிறோம்.*

வாகன எரிபொருள், மின்சாரம், பணியாளர்கள் சம்பளம், கடை வாடகை உள்ளிட்ட பல்வேறு செலவினங்களின் உயர்வை ஈடுசெய்ய *பால் முகவர்களின் வருமானம்* மற்றும் *ஊக்கத்தொகை சதவிகித அடிப்படையில்..!*

*பால் முகவர்களின் உழைப்பை அங்கீகரிக்க* தமிழர் திருநாள் மற்றும் உழைப்பாளர் தினத்தன்று *ஆண்டுதோறும் ஒரு மாத ஊக்கத்தொகை போனஸ்..!*

வங்கி டிஜிட்டல் பணபரிவர்த்தனையால் பால் முகவர்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்ய *டிஜிட்டல் பணபரிவர்த்தனைக்கு ஆண்டு முழுவதும் ஊக்கத்தொகை.!*

கூட்டுறவு பால் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவராக இணையும் *பால் முகவர்களுக்கு நிறுவனத்தின் நிகர லாபத்தில் பங்கு.!*

கூட்டுறவு பால் நிறுவனத்தின் பால் மற்றும் பால் பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் உரிமையாளர்களுக்கு (Equity Share Holder) *நிறுவனத்தின் நிகர லாபத்தில் கூடுதல் போனஸ்.!*

உதாரணமாக அமுல் நிறுவனம் தனது வருமானத்தில் 80%ஐ பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கி வருகிறது.

அது போல நமது நமது சங்கத்தின் கூட்டுறவு பால் நிறுவனமான *TNMDEWA DAPPL தனது வருமானத்தில் 80%ஐ பால் முகவர்களுக்கே* வழங்க இருக்கிறது.

மேலும் விவரங்களுக்கு...!

*சு.ஆ.பொன்னுசாமி*
நிறுவனர் & மாநில தலைவர்
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.
நிர்வாக இயக்குநர்
TNMDEWA DAPPL
பால் முகவர்களின் கூட்டுறவு பால் நிறுவனம்.
அலைபேசி & கட்செவி அஞ்சல் (WhatsApp) :- *9600131725 / 9566121277 / 9360331725*

*எஸ்.பொன்மாரியப்பன், 9791072216*
மாநில பொதுச் செயலாளர், TNMDEWA,
இணை நிர்வாக இயக்குநர், TNMDEWA DAPPL

*ஆர்.கிரி, 9884375333*
மாநில ஒருங்கிணைப்பாளர், TNMDEWA,
இணை நிர்வாக இயக்குநர், TNMDEWA DAPPL

*எஸ்.முருகன், 9840009567*
மாநில பொருளாளர், TNMDEWA
இயக்குநர், TNMDEWA DAPPL

*எஸ்.சுரேஷ்குமார், 7299406066*
மாநில ஒருங்கிணைப்பாளர், TNMDEWA
இயக்குநர், TNMDEWA DAPPL

*ஜெ.அபுபக்கர், 9884056663*
மாநில மக்கள் தொடர்பாளர், TNMDEWA
இயக்குநர், TNMDEWA DAPPL

*கே.காண்டீபன், 9444708700*
மாநில துணைத் தலைவர், TNMDEWA
இயக்குநர், TNMDEWA DAPPL

கூடுதல் விபரங்களுக்கு..!

*எஸ்.எம்.குமார், 8015265500*
தலைமை ஒருங்கிணைப்பாளர், TNMDEWA

*சொ.ராஜா, 9843412669*
மாநில ஒருங்கிணைப்பாளர், TNMDEWA

*"கெட்டுப் போன 4கோடி ரூபாய் மதிப்புள்ள வெண்ணெய், ஆவின் அதிகாரிகளின் திட்டமிட்ட சதிச் செயல்."*            -சிபிசிஐடி விசா...
12/11/2025

*"கெட்டுப் போன 4கோடி ரூபாய் மதிப்புள்ள வெண்ணெய், ஆவின் அதிகாரிகளின் திட்டமிட்ட சதிச் செயல்."*
-சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட முதலமைச்சருக்கு கோரிக்கை.

மதுரை ஆவினுக்கு வடமாநிலத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட சுமார் 4கோடி ரூபாய் மதிப்புள்ள 81டன் வெண்ணெய் கெட்டுப் போய் மிகப்பெரிய நிதியிழப்பை ஏற்படுத்தியிருப்பது கடும் அதிர்ச்சியளிப்பதோடு, இதில் ஆவின் இணைய அதிகாரிகளும், மதுரை மாவட்ட ஆவின் அதிகாரிகளும் கூட்டணி அமைத்து மிகப்பெரிய அளவில் மோசடிகள் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வருவதால் இந்த மோசடி குறித்து ஆவினில் உள்ள விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணை இன்றி சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

ஏனெனில் தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவினில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பால் விற்பனைக்கு தேவையான அளவை விட கூடுதலாக பால் கொள்முதல் செய்யப்பட்டு வரும் நிலையில் வெண்ணெய் கையிருப்பு அதிகமான நிலையிலும் கூட ஆவின் நெய் உற்பத்தி மற்றும் விநியோகம் என்பது தற்போது வரை தமிழ்நாடு முழுவதிலும் தட்டுப்பாடாகவே இருந்து வருகிறது.

அதே சமயம் கையிருப்பில் இருந்த வெண்ணையை நெய்யாக உற்பத்தி செய்து வணிகச் சந்தைக்கு விநியோகம் செய்யாமல், வெண்ணையை வெளிச் சந்தையில் அப்படியே விற்பனை செய்து கமிஷன் பார்க்கும் வேலைகளை ஆவின் அதிகாரிகள் ஜரூராக செய்து வருவது கவலைக்குரிய விசயமாகும்.

குறிப்பாக கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி திருவண்ணாமலை மாவட்டம், அம்மாப்பாளையம் பால் பொருட்கள் உற்பத்தி பண்ணையில் மே மாதம் உற்பத்தி செய்யப்பட்ட சுமார் 250மெட்ரிக் டன் வெண்ணையும், மற்ற சில மாவட்ட ஒன்றியங்களின் பால் பண்ணைகளில் இருந்து சுமார் 250மெட்ரிக் டன் வெண்ணையும் சேர்த்து சுமார் 26கோடி ரூபாய் மதிப்புள்ள மொத்தம் 500மெட்ரிக் டன் வெண்ணையை NCDFI eMarket மூலம் ஆவின் நிர்வாகம் விற்பனை செய்துள்ளது நமது சந்தேகத்தை மேலும் வலுவாக்குகிறது.

ஏனெனில் பால் உற்பத்தி போக உபரியாக இருக்கும் வெண்ணெய் குறைந்தபட்சம் ஆறு மாதம் முதல் அதிகபட்சமாக ஒரு வருடம் வரை பதப்படுத்தி பயன்படுத்தலாம் எனும் போது 5மாதத்திற்குள் அதனை அவசர, அவசரமாக NCDFI eMarket மூலம் விற்பனை செய்ய வேண்டிய அவசியம் ஆவின் அதிகாரிகளுக்கு ஏன் வந்தது..?

அப்படியானால் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆவின் பால் பண்ணைகளில் சுமார் 500டன்னுக்கு மேல் வெண்ணெய் கையிருப்பு இருந்துள்ள நிலையில் வடமாநிலத்தில் இருந்து மதுரை ஆவினுக்கு வெண்ணெய் கொள்முதல் செய்திருப்பது முழுக்க, முழுக்க ஆவினை சுரண்டி கொழுத்துப் போன ஆவின் இணையத்தில் (தலைமையகம்) உள்ள நிதிப்பிரிவு, தரக்கட்டுப்பாடு மற்றும் திட்டமிடல் பிரிவு அதிகாரிகள் மற்றும் மதுரை ஆவினில் உள்ள முக்கிய அதிகாரிகளின் திட்டமிட்ட கூட்டுக் கொள்ளை என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆவின் பால் பண்ணைகளிலும், பால் பொருட்கள் உற்பத்தி பண்ணைகளிலும் வெண்ணெய், பால் பவுடர் (Skimmed Milk Powder) எவ்வளவு கையிருப்பில் உள்ளது என்கிற விபரங்கள் இணைய அதிகாரிகளுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும் சூழலில் இந்த நிதியிழப்பை ஏற்படுத்திய மோசடி செயல் ஆவின் அதிகாரிகளின் திட்டமிட்ட சதி என்பதில் சந்தேகமில்லை.

ஏற்கனவே

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே ஆவினில் கையிருப்பில் இருந்த பல்லாயிரம் டன் பால் பவுடர் (Skimmed Milk Powder, Whole Milk Powder) மற்றும் வெண்ணையை விற்பனை செய்து விட்டு மகராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் செயல்படுவதாக கூறப்படும் (போலி) கூட்டுறவு பால் நிறுவனங்களில் (Nature Delight Multi State Co-operative Dairy Products Limited, Sonai Cooperative Dairy Products Limited) இருந்தும் பல கோடி ரூபாய் மதிப்பிலான பால் பவுடர் மற்றும் வெண்ணெய் கொள்முதல் செய்து கோடிக்கணக்கில் கமிஷன் பார்த்து ஆவினுக்கு நிதியிழப்பை ஆவின் அதிகாரிகள் ஏற்படுத்தியிருந்ததால் அது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சர் அவர்களுக்கும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் பலமுறை புகார் மனுக்கள் அனுப்பியும் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மீண்டும் அது போன்ற மோசடி செயலை ஆவின் அதிகாரிகள் துணிச்சலுடன் செயல்படுத்தியுள்ளனர்.

ஏற்கனவே ஜிஎஸ்டி வரி குறைப்பின் பயனை பொதுமக்களுக்கு முழுமையாக வழங்காத ஆவின் நிதிப்பிரிவு அதிகாரிகள் பாலுற்பத்திக்கு பயன்படுத்த தேவையான வெண்ணையை மொத்தமாக விற்பனை செய்து அதிலும் ஜிஎஸ்டி மோசடி செய்திருப்பதாகவும் வரும் தகவல்கள் கடும் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.

"ஒருவன் வெண்ணையை கையில் வைத்துக் கொண்டு நெய்யிற்காக கடை, கடையாய் ஏறி இறங்கிய கதை" போல பால் பண்ணைகளில் தேவைக்கு அதிகமாகவே வெண்ணெய் கையிருப்பில் இருந்தும் வட மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்து முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் யார்..? யார்..? என்பதை கண்டறிந்து ஆவினுக்கு ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த இழப்பையும் அவர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்வதோடு, அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க உடனடியாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

இணைப்பு:- NCDFI eMarket ல் 500மெட்ரிக் டன் வெண்ணெய் விற்பனை ஆவணம்.

நன்றி

சு.ஆ.பொன்னுசாமி
நிறுவனர் மாநில தலைவர்
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.
அலைபேசி :- 9600131725
கட்செவி அஞ்சல் (WhatsApp) :- 9566121277
12.11.2025 / காலை 10.00மணி.

12/11/2025

முக்கிய அறிவிப்பு.

அன்பிற்கினிய பால் முகவர்களுக்கு வணக்கம்.

சேவை சார்ந்த தொழிலாக விளங்கும் பால் விநியோகத்தில் ஈடுபட்டு வரும் பால் முகவர்கள், பால்வளத்துறை சார்ந்த தொழிலாளர்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்களின் நலனிற்காக தொடர்ந்து பாடுபட்டு வரும் *தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் 2026ம் ஆண்டிற்கான மாதாந்திர நாட்காட்டி தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.* இன்னும் சில தினங்களில் 2026ம் ஆண்டிற்கான மாதாந்திர நாட்காட்டி தயாரிப்பு பணிகள் முடிவடைந்து சங்கத்தின் தலைமை அலுவலகத்திற்கு வந்து விடும்.

மேலும், மாதாந்திர நாட்காட்டி தயாரிப்பில் இதுவரை எந்த ஒரு அமைப்புகளும், சங்கங்களும் செய்யாத வகையில் *உறுப்பினர்களுக்கும், சங்கத்திற்கும் இணைப்பு பாலமாக இருக்கும் சங்க நிர்வாகிகளுக்கு கெளரவம்* அளிக்கும் வகையில் நடப்பாண்டின் (2025) *மாதாந்திர நாட்காட்டியில் நிர்வாகிகளின் பிறந்த நாள் தேதியில் அவர்களின் புகைப்படம், பெயர்,* பொறுப்பினை இடம் பெறச் செய்து அவர்களுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் *கெளரவம் அளித்தது.*

இந்த நிலையில் வரும் *2026ம் ஆண்டிற்கான மாதாந்திர நாட்காட்டியிலும்* நிர்வாகிகளின் பிறந்த நாள் தேதியில் அவர்களின் புகைப்படத்தை இடம் பெறச் செய்து கெளரவிக்க இருப்பதோடு *ஒரு மாதத்திற்கு நான்கு முக்கிய தலைவர்களின் பிறந்த நாளை குறிப்பிட்டு அவர்களின் புகைப்படத்தை தனியாக இடம் பெறச் செய்து* தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் *பெருமைபடுத்த இருக்கிறது.* பூவோடு சேர்ந்த நாரும் மணக்குமல்லவா..!!!

எனவே சேவை சார்ந்த தொழிலான பால் விநியோகத் தொழிலில் ஈடுபட்டு வரும் *பால் முகவர்கள், பால்வளத்துறை சார்ந்த தொழிலாளர்கள்* மற்றும் *பால் உற்பத்தியாளர்களுக்கு* தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் *மாதாந்திர நாட்காட்டி தேவை* என்றால் தங்களைப் பற்றிய *முழுமையான விபரங்கள்* (பால் முகவராக இருந்தால் எந்த நிறுவனத்தின் பால் முகவர், தொழிலாளராக / பணியாளராக / அதிகாரியாக இருந்தால் நிறுவனத்தின் பெயர், பால் உற்பத்தியாளராக இருந்தால் பால் வழங்கும் நிறுவனத்தின் பெயர்) மற்றும் *முழுமையான முகவரி* (கதவு எண், தெரு பெயர், ஊர், தாலுகா, மாவட்டம், அஞ்சல் குறியீட்டு எண்) மற்றும் *தொலைபேசி, வாட்ஸ் அப் எண்* ஆகியவற்றை *9600131725 / 9566121277 ஆகிய வாட்ஸ் அப் எண்ணுக்கு 25.11.2025க்குள் அனுப்பிட வேண்டுகிறோம்.*

ஒருவருக்கு (பால்வளத்துறை சார்ந்தோருக்கு) ஒரு மாதாந்திர நாட்காட்டி மட்டுமே விலையில்லாமல் (இலவசமாக) வழங்கப்படும்.

கூடுதல் மாதாந்திர நாட்காட்டி தேவை என்றால் கூடுதல் *ஒரு நாட்காட்டிக்கு 60.00ரூபாய்* (தயாரிப்பு செலவு மட்டும்) தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் *சங்கத்தின் வங்கி கணக்கில் செலுத்தி விட்டு அதன் தகவலை மேற்கண்ட வாட்ஸ் அப் எண்களுக்கு பகிர வேண்டும்.* (வங்கி கணக்கு விபரம் தேவைப்படுவோருக்கு அனுப்பி வைக்கப்படும்.)

முதலில் வரும் கோரிக்கைகளுக்கும், பால்வளத்துறை சார்ந்தோருக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டு *டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்* என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி

சு.ஆ.பொன்னுசாமி
நிறுவனர் & மாநில தலைவர்
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.
அலைபேசி மற்றும் கட்செவி அஞ்சல் (WhatsApp) 9600131725 / 9566121277
12.11.2025 / இரவு 9.27மணி.

08/11/2025

கூட்டுறவு பால் நிறுவனத்தின் பங்குதாரர் (Partner) இல்லை, உரிமையாளர்களில் ஒருவராக இணைய வரவேற்கிறோம்.

அன்பிற்கினிய பால் முகவர்களுக்கு வணக்கம்.

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் தொடங்கப்பட்டுள்ள கூட்டுறவு பால் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவராக (Equity Share Holders) இணைய விருப்பம் உள்ள பால் முகவர்களை அன்புடன் வரவேற்கிறோம்.

இதுவரை மற்ற பால் நிறுவனங்களின் முகவர்களாக செயல்பட்டு, நமது வாழ்வாதாரத்திற்காக போராடிக் கொண்டிருந்த நாம் பால் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவராக மாறி, நமது வாழ்வாதாரத்தை, வருமானத்தை உயர்த்திக் கொள்ள போகிறோம் என்பதால் இந்த வாய்ப்பு முதலில் வரும் பால் முகவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

இதுவரை பால் முகவர்களாகிய நாம் நமது வாழ்வாதாரத்திற்காக பல்வேறு கோரிக்கைகளை ஆவின் மற்றும் தனியார் பால் நிறுவனங்கள் பலவற்றிடம் முன் வைத்து காத்திருந்த காலம் மாறி நமக்கான கோரிக்கைகளை பால் முகவர்களை உரிமையாளர்களாக்கி "நமக்கு நாமே" திட்டத்தின் அடிப்படையில் செயல்படுத்த இருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

நமது கூட்டுறவு பால் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவராக இணையும் *பால் முகவர்களின் பங்கு முதலீட்டிற்கு (Equity Share Amount)* நிறுவனத்தின் ஆண்டு *நிகர லாபத்தில் சரிசமமான பங்கு (Equity Dividend),*

நமது கூட்டுறவு பால் நிறுவனத்தின் பால் மற்றும் பால் பொருட்கள் வாங்கி விற்பனை செய்யும் பங்கு முதலீட்டாளர்களுக்கு நிறுவனத்தின் ஆண்டு நிகர லாபத்தில் இருந்து கூடுதல் போனஸ் பங்கு (Equity Dividend Bonus)

நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப பங்கு முதலீட்டின் (Equity Share Amount) மதிப்பு ஆண்டுக்காண்டு உயர்வும், அதன் மூலம் நிறுவனத்தின் உரிமையாளர்களான பால் முகவர்களின் வருமானம் உயர்வும் நடக்கும்.

இலவசங்களின் பெயரால் பால் முகவர்களின் உழைப்புச் சுரண்டல் தடுக்கப்படும்.

மாறாக, நமது கூட்டுறவு பால் நிறுவனத்தின் பால் மற்றும் பால் பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் அனைத்து பால் முகவர்களுக்கும் சதவிகித அடிப்படையில் வருமானம் (Billing to MRP).

பால் முகவர்களுக்கு சதவிகித அடிப்படையில் ஊக்கத்தொகை. (%Incentive)

ஆன்லைன் பேமெண்ட்டுக்கு ஆண்டு முழுவதும் ஊக்கத்தொகை.

அனைத்திற்கும் மேலாக ஆண்டுதோறும் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஒரு மாத ஊக்கத்தொகை போனஸ். வழங்கப்படும். இதன் மூலம் உழைப்பிற்கேற்ற வருமானத்தை பால் முகவர்கள் பெறுவர்.

பால் முகவர்களின் நலனிற்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும் செயல்படுத்த இன்னும் எண்ணற்ற திட்டங்கள் நம்மிடம் உண்டு.

பால் முகவர்களாகிய உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைக்கும்பட்சத்தில் பால்வளத்துறையில் மிகப்பெரிய மாற்றத்தை நம்மால் உருவாக்க முடியும், பால் முகவர்கள் அனைவரது வாழ்வாதாரத்தை உயர்த்தி, பால் முகவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த முடியும்.

யாருக்காகவோ உழைத்து, மெழுகுவர்த்தி போல் உருகி, உருக்குலைந்து போய் வரும் பால் முகவர்களுக்கு விடியல் பிறக்க நமக்கான இந்த அரிய முயற்சியில் இணைய பால் முகவர்களே வாருங்கள்,

பால் முகவர்களாக இருக்கும் நாம் பால் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவராக உயர்வோம்.

ஒளிமயமான எதிர்காலம் நமக்காக காத்திருக்கிறது.

ஒன்றுபடுவோம்..! வென்றுகாட்டுவோம்...!!

நன்றி

சு.ஆ.பொன்னுசாமி
நிறுவனர் & மாநில தலைவர்
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.
அலைபேசி :- 9600131725
கட்செவி அஞ்சல் (WhatsApp) :- 9566121277

Address

Chennai
600039

Telephone

09600131725

Website

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்:

Share