12/05/2026
💢🛤️🙏🤝 *சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று சிறப்புமிக்க தமிழக சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றும் வாய்ப்பை பெற்றுள்ள அனைத்து வெற்றியாளர்களுக்கும் பொதுமக்கள் சார்பாக எங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்! இதில், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, குமாரபாளையம், திருச்செங்கோடு, நாமக்கல், துறையூர், பெரம்பலூர் என நமது கனவு ரயில்பாதையான ஈரோடு - நாமக்கல் - பெரம்பலூர் - அரியலூர் புதிய ரயில்பாதை திட்டம் தொடர்புடைய அனைத்து தொகுதிகளிலும் தமிழக வெற்றிக்கழகத்தை நம்பி மக்கள் வாக்களித்துள்ளனர்! எனவே இப்பகுதி மக்களுக்கு நன்றிக்கடனாக அரியலூர் - பெரம்பலூர் - நாமக்கல் - ஈரோடு புதிய ரயில்பாதை திட்டத்தை செயல்படுத்த புதிதாக பதவியேற்றுள்ள மாநில அரசு ரயில்வே துறையுடன் இணைந்து நடவடிக்கை வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு!!*
🙏 தற்பொழுது திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் Dr KG அருண்ராஜ் அவர்கள் அமைச்சராகவும், துறையூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. M. ரவிசங்கர் அவர்கள் துணை சபாநாயகராகவும் பதவியில் அமர்ந்திருப்பது, தமது பகுதியின் நலனுக்காக அரியலூர் - பெரம்பலூர் - நாமக்கல் - ஈரோடு புதிய ரயில்பாதை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையை அளிக்கிறது!
👍 *இந்த திட்டத்தினால் கிடைக்கும் நன்மைகள்:-*
📍 *பெரம்பலூர், துறையூர் போன்ற நகர மக்களுக்கு முதன்முறையாக ரயில் போக்குவரத்து வசதி கிடைக்கும்!*
📍*அரியலூர் - நாமக்கல் ரயில்பாதை ஈரோடு வரை நீட்டிக்கப்பட்டால் கேரளா மற்றும் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கலில் இருந்து கிழக்கு மற்றும் வடக்கு மாவட்டங்கள் செல்ல நேரடி ரயில் இணைப்பு கிடைக்கும்!*
📍*ஈரோடு, திருச்செங்கோடு, நாமக்கல், துறையூர், பெரம்பலூர், அரியலூர் போன்ற நகரங்களின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் பன்மடங்கு வளர்ச்சி அடையும்!*
📍*ஜவுளி பொருட்கள், போக்குவரத்து தளவாடங்கள், சிமெண்ட், வெங்காயம் போன்ற விவசாய பொருட்கள் உற்பத்தியாகும் இடங்களில் இருந்து விரைவாக விற்பனை இடங்களுக்கு கொண்டுசெல்ல முடியும்!*
📍 *கோவை, ஈரோடு, நாமக்கலில் இருந்து பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம் வழியாக சென்னை செல்ல புதிய வழித்தடமாக இது அமையும்.
🙏மேலும், அரியலூர், பெரம்பலூர், திருச்சி (துறையூர் பகுதி), நாமக்கல், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த பல லட்சக்கணக்கான மக்கள் நேரடி பயன்பெறுவார்கள். மேலும் இப்பகுதிகளில் பொருளாதார வளர்ச்சி பலமடங்கு உயரும்!!!
👉 *தயவுசெய்து இந்த கொங்கு, மத்திய மற்றும் வட மாவட்ட மக்கள் பயன்பெறும் இந்த சிறந்த திட்டத்தை மாநில அரசு மத்திய அரசுடன் இணைந்து முக்கியத்துவம் கொடுத்து விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் வெண்டுதலாகும்!!!*
#அரியலூர் #அரியலூர்மாவட்டம் #பெரம்பலூர் #துறையூர் #நாமக்கல் #நாமக்கல்மாவட்டம் #திருச்செங்கோடு #ஈரோடு