04/04/2026
🤦🥹🛤️🚂 *நமது அரியலூர் - பெரம்பலூர் - நாமக்கல் புதிய ரயில் பாதை திட்டத்தின் Survey மற்றும் மதிப்பீட்டு பணிகளுக்கு ரூ. 2.90 கோடி தேவைப்படும் நிலையில் இந்த 2026-2027 நிதியாண்டிலும் வெறும் 16 லட்சம் ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது அரியலூர், பெரம்பலூர், துறையூர், நாமக்கல், ஈரோடு பகுதிகளின் வளர்ச்சி மீதான மத்திய மாநில மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் அக்கறையின்மையின் வெளிப்பாடோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது! இத்திட்டம் தொடர்பான சர்வே பணிகள், 2018 ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில் 8 ஆண்டுகளை கடந்த நிலையில் இன்னும் நிறைவுபெற்று ஒப்புதல் அளிக்கப்படாமல் இருப்பது கவலைக்குரிய ஒன்று!*
💸 *கடந்த நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்:-*
▪️ 2024 - 2025 • ரூ. 25 லட்சம்/-
▪️ 2025 - 2026 • ரூ. 16 லட்சம்/-
▪️ 2026 - 2027 • ரூ. 16 லட்சம்/-
இதுபோன்ற நிலை நீட்டித்தால் survey பணிகள் நிறைவடையவே இன்னும் 5-10 ஆண்டுகள் ஆகலாம்!
👎 *பாராளுமன்ற உறுப்பினர்களின் செயல்திறன் குறைபாடு:-*
இப்பகுதியிலிருந்து கடந்த 25 ஆண்டுகளில் 3 முறை (1999, 2004 - மாண்புமிகு முன்னாள் மத்திய அமைச்சர் திரு. ஆ . ராசா அவர்களும், 2009 - மாண்புமிகு முன்னாள் மத்திய அமைச்சர் திரு. காந்திச்செல்வன் அவர்களும்) மத்திய அமைச்சர்களை பாராளுமன்றத்திற்கு வழங்கியும்கூட இந்த திட்டத்தை நிறைவேற்றாமல் இருப்பது வேதனைக்குரிய விஷயம்! தொடர்ந்து வரும் ஒவ்வொரு தேர்தல்களிலும், அனைத்து கட்சி வேட்பாளர்களும் வெற்றி பெற வேண்டுமென அரியலூர் - பெரம்பலூர் துறையூர் - நாமக்கல் இடையே புதிய ரயில்பாதை அமைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதி வழங்கினரே தவிர இதுவரை இப்பகுதி மக்களின் நன்மை கருதி ரயில் இணைப்பை பெற்றுத்தரவில்லை என்பதே 100% கசப்பான உண்மை! மற்ற கோரிக்கைகளுக்காக நாடாளுமன்ற புறக்கணிப்பு செய்ய ஒன்றுகூடும் பாராளுமன்ற உறுப்பினர்கள், இந்த அரியலூர் - பெரம்பலூர் - நாமக்கல் புதிய ரயில்பாதை திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து நிதி ஒதுக்கீடு பெறவும், இந்த திட்டத்தை நாமக்கல் - ஈரோடு இடையே நீட்டித்து அமைக்கவும், ஒன்று சேர்ந்து ரயில்வே அமைச்சரையும், நிதியமைச்சரையும் சந்தித்து வலியுறுத்தவும் மாநில அரசு சார்பில் கோரிக்கை வைக்கவும் ஒன்றுகூடி இதுநாள்வரை குரல் கொடுக்காதது மக்களுக்கு ஏமாற்றமே!!!
🤦 *மத்திய மாநில அரசுகளின் அக்கறையின்மை:-*
இத்திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்து திட்டப்பணிகளை நிறைவேற்றாமல் மத்திய அரசும், திட்டத்தின் முக்கியத்துவம் குறித்தும், விரைவாக செயல்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் மத்திய அரசுக்கு கடிதம் மூலம் ஒருமுறை கூட வலியுறுத்தாமல் மாநில அரசும் அரியலூர், பெரம்பலூர், துறையூர், நாமக்கல் பகுதி மக்களின் வளர்ச்சி மீது அக்கறையின்றி செய்யப்படுவதாகவே தோன்றுகிறது! கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற தென்மாநிலங்களில் ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்கட்சியாக இருந்தாலும் தங்களின் பகுதி வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து ரயில்வே திட்டங்களை சிறப்பாக செயபடுத்தி மக்களுக்கு சிறந்த ரயில்வே போக்குவரத்து சேவையை வழங்குகின்றனர்! ஆனால் தமிழகத்தில், மாநில அரசு மத்திய அரசையும், மத்திய அரசு மாநில அரசையும் மாற்றி மாற்றி குறை கூறி தமிழக மக்களைத்தான் வஞ்சிக்கின்றனர்!
👆 *வாக்களித்தும் பயனில்லை:-*
திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஐஜேகே, கொமதேக, பாமக என அனைத்து கட்சிகளுக்கும் குறிப்பிட்ட அளவு மக்கள் நம்பி வாக்களித்து தான் வருகின்றனர்! எனினும் வாக்களிக்கும் மக்களின் நம்பிக்கையை காக்கும் வகையில் கட்சிகள் செயல்படவில்லை என்பதே வேதனைக்குரிய உண்மை! எங்களுக்கான அரியலூர் - பெரம்பலூர் - நாமக்கல் - ஈரோடு புதிய ரயில்பாதை திட்டத்தை நிறைவேற்றாத கட்சிகளுக்கு இனி எங்களது வாக்குகளும் கிடையாது!*
👍 *இந்த திட்டத்தின் முக்கியத்துவமும் நன்மையும்:-*
📍 *பெரம்பலூர், துறையூர், திருச்செங்கோடு போன்ற நகர மக்களுக்கு புதிதாக ரயில் போக்குவரத்து வசதி கிடைக்கும்!*
📍*கேரளா மற்றும் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கலில் இருந்து கிழக்கு மற்றும் வடக்கு மாவட்டங்கள் செல்ல நேரடி ரயில் இணைப்பு கிடைக்கும்!*
📍*ஈரோடு, திருச்செங்கோடு, நாமக்கல், துறையூர், பெரம்பலூர், அரியலூர் போன்ற நகரங்களின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் பன்மடங்கு வளர்ச்சி அடையும்!*
📍*ஜவுளி பொருட்கள், போக்குவரத்து தளவாடங்கள், சிமெண்ட், வெங்காயம் போன்ற விவசாய பொருட்கள் உற்பத்தியாகும் இடங்களில் இருந்து விரைவாக விற்பனை இடங்களுக்கு கொண்டுசெல்ல முடியும்!*
🙏மேலும், அரியலூர், பெரம்பலூர், திருச்சி (துறையூர் பகுதி), நாமக்கல், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த பல லட்சக்கணக்கான மக்கள் நேரடி பயன்பெறுவார்கள். மேலும் இப்பகுதிகளில் பொருளாதார வளர்ச்சி பலமடங்கு உயரும்!!!
💢 *இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த இந்த திட்டத்தை நிறைவேற்ற இப்பொழுதேனும் தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்து பெற்றுத்தர வேண்டும் என்பதும், மத்திய மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயப்படுத்த வேண்டும் என்பதும் இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது!!!*
PMO India Narendra Modi Nirmala Sitharaman Ashwini Vaishnaw Dr.L.Murugan K.N. ARUN NEHRU Thol.Thirumavalavan VS Matheswaran Namakkal MP KRN Rajeshkumar Ministry of Railways, Government of India
#அரியலூர் #அரியலூர்மாவட்டம் #பெரம்பலூர் #துறையூர் #நாமக்கல் #நாமக்கல்மாவட்டம் #திருச்செங்கோடு #ஈரோடு